Friday 6 November 2015

பாடல் - 88

பலன்: அபிராமியிடம் சரணடைவோம்

பரம் என்று உன்னை அடைந்தேன், தமியேனும், உன் பத்தருக்குள்
தரம் அன்று இவன் என்று தள்ளத்தகாது - தரியலர் தம்
புரம் அன்று எரியப் பொருப்புவில் வாங்கிய போதில், அயன்
சிரம் ஒன்று செற்ற கையான், இடப்பாகம் சிறந்தவளே

பொருள்:

தரியலர் - அசுரர், புரம் - ஊர் (திரிபுரம்)
அசுரர்களின் இடமான திரிபுரத்தினை, அன்று மேருமலையினை வில்லாக கொண்டு, அதிலிருந்து அம்பு எய்தி அழித்தவரும், அயன் - பிரம்மாவின் 5 தலைகளுள் ஒன்றினை கொய்தவருமான சிவபெருமானின், இடப்பாகத்தில் சிறப்பாக வீற்றிருக்கும் அபிராமி அன்னையே, நீயே பரம் என்று உன்னை சரணடைந்தேன். ஒன்றும் அறியாதவன் நான். தமியேன் - எளியவன். என்னை உன் பக்தர்களுக்குள் தரமற்றவன் என்று ஒதுக்கிவைக்கக் கூடாது. அவ்வாறு செய்தால் அது சரியல்ல.

பாடல் (ராகம் - தர்மவதி, தாளம் - விருத்தம் --) கேட்க:


Check this out on Chirbit

No comments:

Post a Comment