Tuesday 3 November 2015

பாடல் - 87

பலன்: செய்ய முடியாதவற்றை சிறப்பாக செய்து முடித்து புகழ் பெறுவோம்

மொழிக்கும் நினைவுக்கும் எட்டாத நின் திரு மூர்த்தி, எந்தன்
விழிக்கும் வினைக்கும் வெளி நின்றதால், விழியால் மதனை
அழிக்கும் தலைவர், அழியா விரதத்தை, அண்டமெல்லாம்
பழிக்கும் படி, ஒரு பாகம் கொண்டு ஆளும் பராபரையே

பொருள்:

மன்மதன், சிவபெருமான் மீது மலர் அம்புகளை, தனது கரும்பு வில்லிலிருந்து எய்தியதால், அவரின் தவம் கலைந்தது. அதனால் சினம் கொண்டு, மன்மதனை தன் நெற்றிக்கண்ணினால் எரித்தார் சிவபெருமான். தனது தவம் ஒருவராலும் அழிக்கப்பட முடியாதது என்று பறை சாற்றினார். அப்படி ஒரு உணர்ச்சியின்றி இருந்த சிவபெருமானின், அழிக்க முடியா தவத்தை, கலைத்து, உலகம் அவரை பழிக்குமாறு, அவரின் ஒரு பாகத்தில் அம்பாள் சென்று அமர்ந்தாள்.

அவள் பரம்பொருளுக்கு பரம்பொருள்.அவளே பராபரை என்று பட்டர் இங்கு பாடுகிறார். அப்படிப்பட்ட பராபரை, சிவனுக்கு மட்டும் அகப்படுபவள்.

வேறு எவராலும் சொல்லால் வர்ணிக்கப்பட முடியாத திரு உருவம் உடையவள். வேறெவர் மனத்திலும் அகப்படாதவள், தனது விழிக்கு தெரிந்தாள். தான் செய்யும் செயலில் இருந்தாள். எளியவனான தன்னிடம் இவ்வளவு கருணை கொண்டமைக்கு எப்படி நன்றி தெரிவிப்பது என்று உருகி பாடுகிறார் அபிராமி பட்டர்.

பாடல் (ராகம்-சிவசக்தி, தாளம் - விருத்தம்--) கேட்க:

Check this out on Chirbit

No comments:

Post a Comment