Sunday 1 November 2015

பாடல் - 86

பலன்: பயம் நீங்கும்

மால் அயன் தேட, மறை தேட, வானவர் தேட, நின்ற
காலையும், சூடகக் கையையும், கொண்டு, கதித்த கப்பு
வேலை வெங்காலன் என்மேல் விடும் போது, வெளி நில் கண்டாய்,
பாலையும் தேனையும் பாகையும் போலும் பணிமொழியே.

பொருள்;

பால், தேன், வெல்லப்பாகு இவற்றின் இனிப்பினைப் போன்ற இனிய குரல் உடைய அபிராமியே, கப்பு வேல் -> கூறிய வேலினை, காலன் என் மேல் எறியும் போது, நீ என்முன் வந்து "பயப்படாதே" என்று கூறுவாயாக. உனது சங்கு வளையல்கள் அணிந்த கைகளையும், பாதங்களையும், மால்(விஷ்ணு), அயன்(பிரம்மா), மறை (வேதங்கள்), வானவர் (தேவர்கள்) ஆகியோர் தேடி, காண்பதற்கு முயற்சித்தனர். எனினும் அவர்களால் காண முடியவில்லை. அவ்வாறு இருக்க, பக்தனான என்முன் நீ வர வேண்டும்.

சூடகக் கை - சங்கு வளையல்கள் அணிந்த கைகள்.  சூடகம் - சங்கு

பாடல் (ராகம் - மாண்டு, தாளம் - ஆதி) கேட்க:

Check this out on Chirbit

No comments:

Post a Comment