Friday 9 October 2015

பாடல் - 73

பலன்: குழந்தைப் பேறு கிடைக்கும்

தாமம் கடம்பு, படை பஞ்ச பாணம், தனுக் கரும்பு
யாமம் வைரவர் ஏத்தும் பொழுது, எமக்கென்று வைத்த
சேமம் திருவடி, செங்கைகள் நான்கு, ஒளி செம்மை, அம்மை
நாமம் திரிபுரை, ஒன்றோடு இரண்டு நயனங்களே

பொருள்:
தாமம் - மாலை - கடம்ப மாலை. கடம்ப வனத்தில் சஞ்சரிப்பவள். அணியும் மாலை கடம்ப மாலை.
படை - ஆயுதங்கள் - 5 மலர்கள் - தாமரை, அசோக மலர், மாம் பூ, செண்பகம், நாக லிங்கம் மலர். - இவ்வைந்து மலர்களை அம்புகளாக அம்பாள் கையில் வைத்துள்ளாள்.
தனு - வில் - கரும்பு வில்
வைரவர் - பைரவர்கள் / வைராகி என்றும் கூறுவார்.

அம்பாள் அணியும் மாலை - கடம்ப மாலை
அம்பாள் வைத்துள்ள அம்புகள் - 5 மலர் அம்புகள்
அம்பாளின் வில் - கரும்பு வில்
வைரவர்கள் அம்பாளை தொழும் பொழுது - நள்ளிரவு - யாமம்
அம்பாள் எனக்கென்று (பட்டர், பக்தர்களுக்கு என்றும் கொள்ளலாம்) அளித்த செல்வம் (சேமம்) அம்பாளின் திருவடி.
அம்பாளுக்கு 4 கைகள். அவை சிவந்த கைகள். வரங்கள் பல கொடுப்பதால், சிவந்தனவோ என்னவோ!?
அம்பாளின் ஒளி/நிறம் - இளஞ்சிவப்பு
அம்பாளின் நாமம் - திரிபுரை
நயனங்கள் - நெற்றிக்கண் ஒன்றோடு, இன்னும் இரண்டு - ஆக மூன்று கண்கள்

பாடல் (ராகம் - ஹம்ஸத்வனி, தாளம் - ஆதி திஸ்ர நடை) கேட்க:

Check this out on Chirbit

No comments:

Post a Comment