Monday 5 October 2015

பாடல் - 71

பலன்: மனக்குறைகள் தீரும்

அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி, அருமறைகள்
பழகித் திரிந்த பாதாம்புயத்தாள், பனி மா மதியின்
குழவித் திருமுடிக் கோமள யாமளை கொம்பிருக்க,
இழவுற்று நின்ற நெஞ்சே இரங்கேல், உனக்கு என் குறையே?

பொருள்:

  • அன்னையின் அழகுக்கு இணை ஒருவரும் இல்லை.
  • அருமையான மறைகள் பழகிய, தாமரைப் போன்ற பாதங்கள் உடையவள். வேதங்கள் யாவும் அன்னையின் பாதத்தில் வணங்கி நிற்கின்றன என்று முன்னமே பல பாடல்களில் பார்த்துள்ளோம். 
  • குளிர்ந்த சந்திரனை தன் கூந்தலில் சூடியுள்ளவள். 
  • அழகிய வடிவுடையவள்.
இப்படிப்பட்ட அன்னை நமக்கு ஊன்றுகோலாக துணை இருக்க, நாம் எதற்காக குறைப்பட வேண்டும்?

பாடல் (ராகம் - கேதாரம், தாளம் - ஆதி - திஸ்ர நடை) கேட்க:

Check this out on Chirbit

No comments:

Post a Comment