Sunday 27 September 2015

பாடல் - 69

பலன்: சகல சௌபாக்யங்களையும் பெறலாம்

தனம் தரும் கல்வி தரும் ஒருநாளும் தளர்வறியா
மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சமில்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக் கண்களே

பொருள்:
67-வது பாடலில், அன்னையை நினைக்காமல் இருப்போர் படும் துன்பத்தை, பட்டர் கூறினார். இங்கே, அம்பாளின் கடைக்கண்கள் தரக்கூடிய நன்மைகளை கூறுகிறார்.

கார்மேகம் போல், கருமையான, கனமான கூந்தலினை கொண்ட அபிராமி அம்மையின் கடைக்கண்கள், அன்னையின் மேல் அன்பு கொண்டவர்களுக்கு:
1. தனம் - செல்வம்
2. கல்வி - அறிவு
3. ஒரு நாளும் தளர்வறியா மனம் - தைரியமான மனம்
4. தெய்வ வடிவம் - தெய்வீகமான அழகு ததும்பும் வடிவம் (ஸாரூப்யம் என்று ஒருவகை முக்தி)
5. நெஞ்சில் வஞ்சம் இல்லா இனம் - வஞ்சனை இல்லா உறவினர்கள்
6. நல்லன எல்லாம் - நல்லவை அனைத்தும்

ஆகிய 6 செல்வங்களையும் தரும்.

பாடல் (ராகம்-பௌளி, தாளம் - ஆதி) கேட்க:

Check this out on Chirbit

No comments:

Post a Comment