Friday 25 September 2015

பாடல் - 68

பலன்: நிலம், வீடு போன்ற செல்வங்கள் கிடைக்கும்

பாரும் புனலும் கனலும் வெங்காலும் படர் விசும்பும்
ஊரும் முருகு சுவை ஒளி ஊறு ஒலி ஒன்றுபடச்
சேரும் தலைவி சிவகாம சுந்தரி சீறடிக்கே
சாரும் தவம் உடையார் அடையாத தனம் இல்லையே

பொருள்:

பார் - நிலம்
புனல் - நீர்
கனல் - நெருப்பு
வெங்கால் - காற்று
படர் விசும்பு - பரந்த ஆகாயம்

ஊரும் முருகு - தொடு உணர்வு
சுவை
ஒளி - வெளிச்சம்
ஊறு - வாசனை
ஒலி - சத்தம்

5 பூதங்களாகவும்  - அவற்றை சார்ந்த 5 உணர்வுகளாகவும் (சப்தம், ஸ்பர்சம், ரூபம், ரஸம், கந்தம்) இருக்கக்கூடியவள் அன்னை அபிராமி. அவளின் சிறந்த திருவடிகளை சேர்பவர்கள் அடையக்கூடிய தவம் சிறந்த தவமாகும்.
அவர்களால் பெற இயலாத செல்வம் ஏதும் இல்லை. அதாவது எல்லா செல்வங்களையும் பெறுவார்கள்.

பாடல் (ராகம் - ஹம்சநாதம், தாளம் - ஆதி) கேட்க:

Check this out on Chirbit

No comments:

Post a Comment