Sunday 20 September 2015

பாடல் - 65

பலன்: மகப்பேறு கிட்டும்

ககனமும் வானும் புவனமும் காண, விற் காமன் அங்கம்
தகனம் முன் செய்த தவம் பெருமாற்கு, தடக்கையும் செம்
முகனும் முந்நான்கு இரு மூன்று என தோன்றிய மூதறிவின்
மகனும் உண்டாயதன்றோ? வல்லி நீ செய்த வல்லபமே

பொருள்:

ககனம் - அண்டம் (universe ), வான் - வானம் (sky) , புவனம் - பூமி (உலகம், earth).

விற் காமன் - வில் ஏந்திய மன்மதன்

தடக்கையும் செம் முகனும் முந்நான்கு இரு மூன்று -

தடக்கை முந்நான்கு -> கைகள் 3 x  4 = 12
செம்முகம் இரு மூன்று -> முகம் 2 x 3 = 6

அண்டமும், வானமும், உலகமும் காணும் வண்ணம், கரும்பு வில் ஏந்திய மன்மதனை சிவா பெருமான் எரித்தார். அந்த சிவபெருமானுக்கும் கூட அறிவில் சிறந்த, 12 கைகளும், 6 முகங்களும் கொண்ட அழகிய முருகனை பெற சக்தியினை அம்பாள் கொடுத்தாள். அவளின் கருணையினை என்ன என்று கூறுவது!

பாடல் (ராகம் - கன்னட கௌளை, தாளம் - ஆதி) கேட்க:


Check this out on Chirbit

No comments:

Post a Comment