Friday 4 September 2015

பாடல் - 58

பலன்: மன அமைதி கிட்டும்

அருணாம்புயத்தும், என் சித்தாம்புயத்தும் அமர்ந்திருக்கும் 
தருணாம்புய முலைத் தையல், நல்லாள், தகை சேர் நயனக் 
கருணாம்புயமும், வதனாம்புயமும், கராம்புயமும், 
சரணாம்புயமும், அல்லால் கண்டிலேன் ஒரு தஞ்சமுமே 

பொருள்:
  • காலையில் மலரும் இளஞ்சிவப்பு நிற தாமரையிலும் (அருண அம்புயம் (அம்புஜம் திரிதல் அம்புயம்), என் மனத்தாமரையிலும் வீற்றிருப்பவள் அன்னை அபிராமி. 
  • அவள் தாமரை மொட்டு போன்ற குவிந்த முலைகளை உடையவள். என்றும் இளம் பெண்ணாக காட்சி தருபவள் (தையல்). [பாலாம்பிகை (அ) தையல்நாயகி என்று வைத்தீஸ்வரன் கோவிலில் அம்பாளுக்கு பெயர்].
  • மிகவும் நல்லவள். 
  • அன்னையின் பெருமை வாய்ந்த, கருணை ததும்பும் கண்களாகிய தாமரைகள், முகமாகிய தாமரை, கரங்களாகிய தாமரைகள், திருவடிகளான தாமரைகள் இவற்றை தவிர வேறொரு தஞ்சம் தனக்கில்லை என்று பட்டர் கூறுகிறார். 
பாடல்(ராகம் - மாயாமாளவகௌளை, தாளம்--விருத்தம்--) கேட்க:

Check this out on Chirbit

No comments:

Post a Comment