Monday 31 August 2015

பாடல் - 56

பலன்: எல்லாவற்றையும் வசீகரிக்கும் திறன் பெறலாம்

ஒன்றாய் அரும்பி பலவாய் விரிந்து இவ்வுலகு எங்குமாய்
நின்றாள், அனைத்தையும் நீங்கி நிற்பாள், எந்தன் நெஞ்சினுள்ளே
பொன்றாது நின்று புரிகின்றவா, இப்பொருள் அறிவார்
அன்று ஆலிலையில் துயின்ற பெம்மானும், என் ஐயனுமே.

பொருள்:
அன்னை அபிராமியிடமிருந்து தோன்றியதே இவ்வுலகமும் உயிர்களும். அவ்வாறு அவள் ஒருவளே. அனால் பலவாக பிரிந்து காணப்படுகிறாள். தோன்றிய பொருட்களிலிருந்தும் நீங்கி நிற்பாள். அடியார்களின் நெஞ்சினுள் நீங்காது இருந்து ஆட்சி புரிவாள். அவளை பற்றிய முழு உண்மையினை அறிந்தவர்கள் இருவரே - ஆலிலையில் துயின்ற கிருஷ்ணன் (விஷ்ணு) மற்றும் சிவன்.

பாடல்(ராகம்-தர்பாரிகானடா, தாளம் - --விருத்தம் --) கேட்க:

Check this out on Chirbit

No comments:

Post a Comment