Wednesday 26 August 2015

பாடல் - 53

பலன்: பொய்யுணர்வு நீங்கும்

சின்னஞ்சிறிய மருங்கினில் சாத்திய செய்யப்பட்டும்
பென்னம்பெரிய முலையும், முத்தாரமும், பிச்சி மொய்த்த
கன்னங்கரிய குழலும், கண்மூன்றும், கருத்தில் வைத்துத்
தன்னந்தனி இருப்பார்க்கு இதுபோலும் தவம் இல்லையே

பொருள்:

அன்னையின் சிறிய மெலிந்த இடை, அதில் சாத்தப்பட்ட சிறந்த பட்டு, பெரிய முலை, மார்பில் திகழும் முத்துமாலை, பிச்சிப் பூ சூடிய கருங்கூந்தல், மூன்று கண்கள் இவற்றை ஒருவர் தன் மனதில் வைத்து தியானித்தால், அதுபோன்ற பெருந்தவம் வேறொன்றும் இல்லை.

பாடல்(ராகம் - ஹம்சானந்தி, தாளம் - --விருத்தம் --) கேட்க:

Check this out on Chirbit

No comments:

Post a Comment