Thursday 30 July 2015

பாடல் - 48

பலன்: உடல் மீதுள்ள பற்று விலகும்

சுடரும் கலைமதி துன்றும் சடைமுடிக் குன்றில் ஒன்றிப்
படரும் பரிமள பச்சைக்கொடியைப் பதித்து நெஞ்சில்
இடரும் தவிர்த்து இமைப்போது இருப்பார், பின்னும் எய்துவரோ
குடரும் கொழுவும் குருதியும் தோயும் குரம்பையிலே.

பொருள்:

சுடரும் கலைமதி - ஒளிவீசுகின்ற பிறை சந்திரனை,
சடைமுடிக் குன்றில் - தன் குன்றினை ஒத்த சடைமுடியில் அணிந்தவரான சிவபெருமானின் நெஞ்சில் நிறைந்த,
பரிமள பச்சைக்கொடி - வாசமிகுந்த பச்சைக்கொடியே,
உன்னை தன் நெஞ்சில் வைத்து, எப்போதும் வழிபடும் அடியார்கள், துன்பத்தை தவிர்த்து, மீண்டும் குருதி, தோல், குடல் நிறைந்த இப்பிறவியைபெறாமல் என்றும் மகிழ்வாய் இருப்பார்கள்.

பாடல் (ராகம் - காபி, தாளம் - --விருத்தம்--) கேட்க:


Check this out on Chirbit

No comments:

Post a Comment