Tuesday 28 July 2015

பாடல் - 47

பலன்: யோக நிலை அளிக்கும்

வாழும்படி ஒன்று கண்டு கொண்டேன், மனத்தே ஒருவர்
வீழும்படி அன்று, விள்ளும்படி அன்று, வேலை நிலம்
ஏழும் பருவரை எட்டும், எட்டாமல் இரவு பகல்
சூழும் சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்றதே

பொருள்:
இரவு பகல் சூழும் சுடர்கள் - சந்திர, சூரியர்கள்.

உலகில் இரவும், பகலும் உருவாக காரணமாக இருக்கும் சூரியன், சந்திரன் இவைகளுக்கு நடுவே இருந்து பிரகாசிப்பவள் - அன்னை அபிராமி.

வேலை நிலம் ஏழும் பருவரை எட்டும், எட்டாமல் -
அவள், ஏழு நிலங்கள், எட்டு உயர்ந்த மலைகள் ஆகியவைக்கும் எட்டதவள்.

ஆனால், மனத்தினால் ஒருவர் தியானித்தால் அவர்களுக்கு எளிதில் எட்டுபவள். அன்னையை வணங்குவதே வாழ்வதற்கு வழி.

பாடல் (ராகம்: வசந்தா, தாளம் - ஆதி) கேட்க:

Check this out on Chirbit

No comments:

Post a Comment