Saturday 18 July 2015

பாடல் - 45

பலன்: உலகத்தோர் பழியிலிருந்து விடுபடுவோம்

தொண்டு செய்யாது, நின் பாதம் தொழாது, துணிந்து இச்சையே
பண்டு செய்தார் உளரோ, இலரோ? அப்பரிசு அடியேன்
கண்டு செய்தால் அது கைதவமோ அன்றி செய்தவமோ?
மிண்டு செய்தாலும் பொறுக்கை நன்றே பின் வெறுக்கை அன்றே.

பொருள்:

அன்னை அபிராமியே, உனக்கு தொண்டு செய்யாமலும், உன் பாதம் தொழாமலும் இருந்துக்கொண்டு, தன் விருப்பப்படியே கடமைகளை மட்டுமே செய்து வாழ்ந்த ஞானிகள் இருந்தனர். அவ்வாறு நானும் இருந்தால் அது உனக்கு மகிழ்ச்சி அளிக்குமா இல்லையா என்பது தெரியவில்லை. எனினும் என்னை வெறுக்காது பொறுத்தருள வேண்டும்.

இங்கு பூர்வ மீமாம்சர்களை குறிக்கிறார். கர்மமே பிரம்மம் என்ற நம்பிக்கையினை உடையவர்கள் பூர்வ மீமாம்சர்கள். குமரில பட்டர், மண்டன மிஸ்ரர் போன்றோர். பிறகு, ஆதி சங்கரரால் வாதத்தில் வெல்லப்பட்டு கர்மம், பக்தி, ஞானம் இம்மூன்றுமே அவசியம். கர்மம் மட்டும் போதாது என்று அத்வைத சித்தாந்தத்தினை ஒப்புக்கொண்டனர். கர்மத்தை செய்து, நம் உடலையும் மனத்தினையும் தூய்மை செய்து கொள்ள வேண்டும். பின் இறைவனிடம் பக்தி செலுத்தி  ஞானத்தினை பெற வேண்டும். ஞானத்தினை அடைந்தால், பிரம்மமும் நாமும் ஒன்று. அதன்பின் த்வைதமே (இருமை) இருக்காது. அஹம் ப்ரஹ்ம்மாஸ்மி என்ற மஹா வாக்யமே அத்வைத சாரம்.

  1. ப்ரஞானம் பர பிரம்ம (ஞானமே பிரம்மம் - ஐதரேய உபநிடதம், ரிக் வேதம்)
  2. தத் த்வம் அஸி (அதுவே நீ - மாண்டூக்ய உபநிடதம் - அதர்வ வேதம்)
  3. அயம் ஆத்மா பர பிரம்மம் (இந்த ஆத்மாவே பிரம்மம் - சாந்தோக்ய உபநிடதம் - வேதம்)
  4. அஹம் ப்ரஹ்ம்மாஸ்மி (பிரம்மமே நான், நானே பிரம்மம் - ப்ரஹதாரன்யக உபநிடதம் - யஜுர் வேதம்)

இவையே உபநிடதங்கள் கூறும் மஹா வாக்யங்கள்.

பாடல் (ராகம் - கீரவாணி, தாளம் - -- விருத்தம்-- ) கேட்க:


Check this out on Chirbit

No comments:

Post a Comment