Monday 22 June 2015

பாடல் - 39

பலன்: கருவிகளை நன்றாக கையாளும் திறன் கிடைக்கும்

ஆளுகைக்கு உந்தன் அடித்தாமரைகள் உண்டு, அந்தகன்பால்
மீளுகைக்கு உந்தன் விழியன் கடை உண்டு, மேல் இவற்றின்
மூளுகைக்கு, என் குறை, நின் குறையே அன்று - முப்புரங்கள்
மாளுகைக்கு, அம்புதொடுத்த வில்லான் பங்கில் வாணுதலே.

பொருள்:
அபிராமி பட்டர் கூறுகிறார்:
1. அம்பாளின் திருவடிகள்அவளை தொழுபவரை ஆளும்
2. அம்பாளின் கடைக்கண் பார்வையானது  அவளை வணங்குபவரை  யமனிடமிருந்து மீட்கும்.

இவ்விரண்டும் அம்பாளை தொழுதால், கிடைக்கும். தொழாவிட்டால் கிடைக்காது. இது தன்னுடைய குறையே. அம்பாளின் குறையல்ல.

அம்பாள்அழகிய நெற்றியினை  உடையவள். முப்புரங்கள் - திரிபுரம் என்னும் அரக்கர்களின் ஊர். அந்த திரிபுரத்தை அழிக்க சிவபெருமான் வில் ஏந்தி அம்பு தொடுத்தார். அவரின் ஒரு பாகத்தில் அம்பாள் உள்ளாள். திரிபுரம் எரித்த விரிசடை பெருமான் என்று சிவபெருமானை நூல்கள் கூறுகின்றன.

பாடல் (ராகம் - பெஹாக், தாளம் - --விருத்தம்---) கேட்க:


Check this out on Chirbit

No comments:

Post a Comment