Wednesday 17 June 2015

பாடல் - 37

பலன்: நவமணிகளை பெற்று தரும்

கைக்கே அணிவது கன்னலும் பூவும், கமலம் அன்ன
மெய்க்கே அணிவது வெண்முத்து மாலை, விட அரவின்
பைக்கே அணிவது பண்மணிக் கோவையும் பட்டும், எட்டுத்
திக்கே அணியும் திருவுடையானிடம் சேர்பவளே

பொருள்:
இங்கே அம்பாள் என்னென்னவெல்லாம் அணிகிறாள் என்பது கூறப்பட்டுள்ளது.
கைகளில் - கரும்பு வில், மலர் அம்பு  [கன்னல் - கரும்பு]
கமலம் [தாமரை] மற்றும் அன்னப்பறவை போன்ற மெல்லிய உடலில் வெண்முத்து மாலை.
விடம்கொண்ட நாகம் போன்ற மெல்லிய இடையில் - பலமணிகளால் கோர்க்கப்பட்ட மாலை, மற்றும் பட்டு.
இவ்வாறு அணிகலன்களை அணியும் அம்பிகை, யாரிடம் சென்று இடது பாகத்தில் சேர்கிறாள்? எட்டுத்திக்குகளையுமே ஆடையாய் அணிந்திருக்கும் திகம்பரனான சிவபெருமானிடம்.

நித்யாய சுத்தாய திகம்பராய - என்று சிவனை ஆதி சங்கரர் சிவபஞ்சாக்ஷர ஸ்தோத்திரத்தில் வர்ணித்துள்ளார்.

பாடல் (ராகம்: சுத்த தன்யாசி, தாளம்: ஆதி) கேட்க:


Check this out on Chirbit

No comments:

Post a Comment