Saturday 16 May 2015

பாடல் - 34


பலன் - சிறந்த நிலங்கள் கிடைக்கும்

வந்தே சரணம் புகும் அடியாருக்கு, வானுலகம்
தந்தே பரிவோடு தான்போய் இருக்கும், சதுர்முகமும்
பைந்தேன் அலங்கல் பருமணி ஆகமும், பாகமும் பொன்
செந்தேன் மலரும், அலர்கதிர் ஞாயிறும் திங்களுமே

பொருள்:

அன்னை அபிராமி எதிலெல்லாம் இருக்கிறாள் என்று பட்டர் இப்பாடலில் கூறுகிறார்.
1. சதுர்முகனின் (பிரம்மா) படைப்புத்தொழில் - ஸ்ருஷ்டி கர்த்ரீ பிரம்ம ரூபா என்று லலிதா சஹஸ்ரநாமம் கூறுகிறது.
2. தேன் சிந்தும் மலர்கள் நிறைந்த மாலை, துளசி, அணிகலன்கள்அணிந்தவரான திருமாலின் மனத்தில் - அவர் செய்யும் காப்புதொழில் - கோப்த்ரீ கோவிந்த ரூபிணி என்று லலிதா சஹஸ்ரநாமம் கூறுகிறது.
3. பாகமும் - ஈசனின் இட பாகத்தில் - அதாவது சிவனின் அழிக்கும் தொழிலில். சம்ஹாரினீ ருத்ர ரூபா என்று லலிதா சஹஸ்ரநாமம் கூறுகிறது.
4. தேன் ததும்பும் தாமரை மலரில் (பொன் செந்தேன் மலரும்)
5. அலர் கதிர் ஞாயிறு - விரிந்த கதிர்கள் உடைய சூரியன் - பானு மண்டல மத்யஸ்தா என்று லலிதா சஹஸ்ரநாமம் கூறுகிறது.
6. திங்களுமே - சந்திரனிலும். சந்திர மண்டல மத்யாகா என்று லலிதா சஹஸ்ரநாமம் கூறுகிறது.

மேலும் அன்னை தன்னிடம் வந்து சரணம் புகுவோற்கு உயர்ந்த தேவலோகத்தை தருகிறாள்.

பாடல் (ராகம் - ஜனரஞ்சனி, தாளம் --விருத்தம்---) கேட்க:

Check this out on Chirbit

No comments:

Post a Comment