Monday 20 April 2015

பாடல் - 25

பலன் - நினைத்த காரியம் கைக்கூடும்

பின்னே திரிந்து, உன் அடியாரை பேணி, பிறப்பறுக்க
முன்னே தவங்கள் முயன்று கொண்டேன், முதல் மூவருக்கும்
அன்னே, உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே
என்னே? இனி உன்னை யான் மறவாமல் நின்று ஏத்துவனே.

பொருள்:

மும்முர்த்திகளுக்கும் தாயே, உலகுக்கு அருமையான மருந்தே, அன்னை அபிராமியே, இனி பிறக்கக்கூடாது என்பதற்காக, தவங்கள் பல செய்தேன், செய்துக்கொண்டிருக்கிறேன். உன் அடியார்களுக்கு தொண்டு செய்கிறேன். எப்பொழுதும் உன்னை மட்டுமே மறவாமல் துதி செய்கின்றேன். இனியும் துதிப்பேன்.

பாடல் (ராகம் - சரஸ்வதி மனோஹரி, தாளம் - ஆதி ) கேட்க:



Check this out on Chirbit

No comments:

Post a Comment