Thursday 9 April 2015

பாடல் - 23

பலன்: குறைவில்லா மகிழ்ச்சி நல்கும்

கொள்ளேன், மனத்தில் நின்கோலம் அல்லாது, அன்பர் கூட்டம் தன்னை
விள்ளேன், பரசமயம் விரும்பேன், வியன் மூவுலகுக்கு
உள்ளே, அனைத்தினுக்கும் புறம்பே, உள்ளத்தே விளைந்த
கள்ளே, களிக்கும் களியே, அளியஎன் கண்மணியே.

பொருள்:

அன்னை அபிராமியே, உன் கோலம் அல்லாது மற்றொன்றை என் மனத்தில் நினைத்துக்கொள்ள மாட்டேன். உன் அடியார்களை பகைத்துக்கொள்ள மாட்டேன். உன்னைத்தவிர மற்றொரு தெய்வத்தை விரும்ப மாட்டேன். மேல் உலகம், பூமி, கீழ் உலகம் ஆகிய மூவுலகிற்கும் உள்ளேயும். இவற்றிற்கு வெளியேவும் நிறைந்திருக்கும் அன்னையே, நீ என்னுள்ளத்தில் என்றும் ஆனந்தத்தை தரும் தேன் போன்றவள். ஆனந்தத்திற்கு ஆனந்தம் தருபவள். என் கண்மணி நீ.

ஆனந்த லஹரி என்று அம்பாளுக்கு ஒரு பெயர். அதாவது ஆனந்ததினை பிரவாஹமாக அருள்பவள். சங்கரரின் சௌந்தர்ய லஹரியில் முதல் 41 ஸ்லோகங்கள் ஆனந்தலஹரி என்றுதான் அழைக்கப்படுகின்றன. அதாவது ஆனந்த வெள்ளம் என்று பொருள். பின் இருக்கக்கூடிய 59 ஸ்லோகங்கள் சௌந்தர்ய லஹரி - அழகு வெள்ளம்.

பாடல் (ராகம் - ஸாமா, தாளம் - ஆதி) கேட்க:

Check this out on Chirbit

No comments:

Post a Comment