Wednesday 1 April 2015

பாடல் - 22

பலன்: பிறவாமை அளிக்கும்

கொடியே, இளவஞ்சி கொம்பே, எனக்கு வம்பே பழுத்த
படியே, மறையின் பரிமளமே, பனி மால் இமயப்
பிடியே, பிரமன் முதலாய தேவரை பெற்ற அம்மே,
அடியேன் இறந்து இங்கு இனி பிறவாமல் வந்து ஆண்டுகொள்ளேன்

பொருள்:

கொடி போன்றவளே, இளங்கன்று போல் பசுமையான கொம்பே, தகுதியற்ற எனக்கு தானாகவே முன்வந்து அருள்புரிபவளே, வேதத்தின் ஆதாரமே, பனி மூடிய இமயத்தில் பிறந்த பெண் யானை போன்ற வீரம் நிறைந்தவளே, பிரம்மா முதலிய தேவர்களை பெற்றவளே, நான் இப்பிறவியில் இறந்த பின் மீண்டும் பிறவாமல் என்னை ஆட்கொள்வாயாக.

பாடல் (ராகம் - புஷ்பலதிகா, தாளம் - ஆதி) கேட்க:

Check this out on Chirbit

No comments:

Post a Comment