Monday 9 March 2015

பாடல் - 15

பலன் - பெருஞ்செல்வமும் பேரின்பமும் நல்கும்

தண்ணளிக்கு என்று முன்னே பல கோடி தவங்கள் செய்வார்,
மண்ணளிக்கும் செல்வமோ பெறுவார்? - மதி வானவர் தம்
விண்ணளிக்கும் செல்வமும், அழியா முக்தி வீடும் அன்றோ?
பண்ணளிக்கும் சொல் பரிமள யாமளை பைங்கிளியே

பொருள்:
அன்னை அபிராமி - இனிய இசையினை எழுப்பக்கூடிய பசுங்கிளி (பச்சை கிளி - பைங்கிளி)
பண் - இசை , பண்ணளிக்கும் - இசை தரக்கூடிய , சொல் - இனிமை. எப்படிப்பட்ட இனிமை ? நல்ல வாசனை போன்ற இனிமை (பரிமள)

அன்னையின் அருளுக்காக முற்பிறவியில் பலகோடி தவங்கள் செய்பவர்களுக்கு கிடைக்கக்கூடியது இவ்வுலகில் இருப்பதற்க்கான செல்வமா? இல்லை இல்லை. தேவர்களுக்கு இணையான தேவப்பதவி. பின்னர் என்றும் அழியாத வீடு பேறு - முக்தி. இவையே தலை சிறந்த செல்வங்கள் ஆகும்.

பாடல் (ராகம் - பேகடா, தாளம் - கண்ட சாபு) கேட்க:

Check this out on Chirbit

No comments:

Post a Comment