Friday 30 January 2015

பாடல் - 1

பலன்: ஞானமும் நல்வித்தையும் அளிக்கும்

உதிக்கின்ற செங்கதிர் உச்சித்திலகம் உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம்போது மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடி மென்கொடி குங்கும தோயமென்ன
விதிக்கின்ற மேனி அபிராமி எந்தன் விழித்துணையே

பொருள்:
அன்னையின் நிறம் இளம் சிவப்பு. அருணா என்ற பெயரே, இதனை குறிக்கிறது. அருண வர்ணம் என்றால், இளம் சிவப்பு. சூரியன் உதிக்கும் போது வானில் தோன்றும் சிவப்பு, அருண வர்ணம். அந்த சிவந்த நிறத்தில், உச்சித்திலகம் வைத்துள்ளாள் அன்னை. மனிதர்கள் பெரிதும் மதிக்கும் மணியான மாணிக்கம், மாதுளம் மொட்டு, இவை போன்ற சிவந்த மேனியாள் நம் அன்னை அபிராமி. சிவந்த தாமரையில் அமர்ந்திருக்கும் லக்ஷ்மி தேவி பேரழகு கொண்டவள். அந்த லக்ஷ்மி தேவியே துதிக்கும் அளவிற்கு அழகி, நம் அபிராமி. கொடி மின்னல், குங்குமம் போன்ற சிவந்த நிறம் கொண்டவளான அபிராமி அன்னையே எனது துணை ஆவாள்.

உதயத் பானு சஹாஸ்ராபா - 1000 உதய சூரியர்களை போன்ற பிரகாசம் கொண்டவள் என்று ஸ்ரீ லலிதா சஹஸ்ர  நாமம் கூறுகிறது.

ஆதி சங்கரர், தனது மீனாக்ஷி பஞ்சரத்ன ஸ்தோத்ரத்தில், முதல் ஸ்லோகத்தில் - உத்யத் பானு ஸஹஸ்ர கோடி ஸத்ருஷாம்  என்று அம்பாளை ஆயிரம் கோடி உதய சூரியர்களை போன்ற ஒளி உடையவள் என்று அழைக்கிறார்.

அபிராமி என்றாலே, அழகி என்று அர்த்தம்.

சௌந்தர்ய லஹரி ஸ்லோகம் - 44 இல், சங்கரர், அம்பாளின் வகிட்டின் மகிமையை கூறியுள்ளார்.

தனோது க்ஷேமம் நஸ்தவ வதன சௌந்தர்ய லஹரீ
பரீவாஹஸ்ரோத: ஸரணிரிவ  ஸீமந்த ஸரணி 
வஹந்தீ ஸிந்தூரம் ப்ரபலகபரீ பார திமிர
த்விஷாம் ப்ருந்தைர் பந்தீக்ருதமிவ நவீனார்க்க கிரணம் 

ஸீமந்த ஸரணி - வகிட்டின் ரேகை
வஹந்தீ ஸிந்தூரம் - தரிக்கும் குங்குமம்
நவீனார்க்க கிரணம் - உதய சூரியனின் ஒளி

அம்பாள் தன் வகிட்டில் தரிக்கும் குங்குமம், உதய சூரியனின் ஒளி. இதுவே உதிக்கின்ற செங்கதிர் உச்சித்திலகம் என்று பட்டர் கூறுகிறார்.


பாடல் - ராகம் - நாட்டை, தாளம் - ஆதி



Check this out on Chirbit

No comments:

Post a Comment