Saturday 19 December 2015

அபிராமி அந்தாதி - முகப்பு

அபிராமி அந்தாதி பிள்ளையார் காப்பு, 100 பாடல்கள், நூற்பயன் ஆகியவற்றை கேட்பதற்கு இங்கு அழுத்தவும்.

அபிராமி அந்தாதி பிள்ளையார் காப்பு, 100 பாடல்கள், நூற்பயன் ஆகியவற்றின் செய்யுள், பொருள், இசை ஆகியவற்றை படிக்க கீழில் உள்ள எண்களை அழுத்தவும்.

பிள்ளையார் காப்பு
01 02 03 04 05 06 07 08 09 10
11 12 13 14 15 16 17 18 19 20
21 22 23 24 25 26 27 28 29 30
31 32 33 34 35 36 37 38 39 40
41 42 43 44 45 46 47 48 49 50
51 52 53 54 55 56 57 58 59 60
61 62 63 64 65 66 67 68 69 70
71 72 73 74 75 76 77 78 79 80
81 82 83 84 85 86 87 88 89 90
91 92 93 94 95 96 97 98 99 100
நூற்பயன் 

Thursday 17 December 2015

அபிராமி அந்தாதி - பாடல்கள் கேட்க

பிள்ளையார் காப்பு

Check this out on Chirbit

பாடல் - 1

Check this out on Chirbit

பாடல் - 2

Check this out on Chirbit

பாடல் - 3

Check this out on Chirbit

பாடல் - 4

Check this out on Chirbit

பாடல் - 5

Check this out on Chirbit

பாடல் - 6

Check this out on Chirbit

பாடல் - 7

Check this out on Chirbit

பாடல் - 8

Check this out on Chirbit

பாடல் - 9

Check this out on Chirbit

பாடல் - 10

Check this out on Chirbit

பாடல் - 11

Check this out on Chirbit

பாடல் - 12

Check this out on Chirbit

பாடல் - 13

Check this out on Chirbit

பாடல் - 14

Check this out on Chirbit

பாடல் - 15

Check this out on Chirbit

பாடல் - 16

Check this out on Chirbit

பாடல் - 17

Check this out on Chirbit

பாடல் - 18

Check this out on Chirbit

பாடல் - 19

Check this out on Chirbit

பாடல் - 20

Check this out on Chirbit

பாடல் - 21

Check this out on Chirbit

பாடல் - 22

Check this out on Chirbit

பாடல் - 23

Check this out on Chirbit

பாடல் - 24

Check this out on Chirbit

பாடல் - 25

Check this out on Chirbit

பாடல் - 26

Check this out on Chirbit

பாடல் - 27

Check this out on Chirbit

பாடல் - 28

Check this out on Chirbit

பாடல் - 29

Check this out on Chirbit

பாடல் - 30

Check this out on Chirbit

பாடல் - 31

Check this out on Chirbit

பாடல் - 32

Check this out on Chirbit

பாடல் - 33

Check this out on Chirbit

பாடல் - 34

Check this out on Chirbit

பாடல் - 35

Check this out on Chirbit

பாடல் - 36

Check this out on Chirbit

பாடல் - 37

Check this out on Chirbit

பாடல் - 38

Check this out on Chirbit

பாடல் - 39

Check this out on Chirbit

பாடல் - 40

Check this out on Chirbit

பாடல் - 41

Check this out on Chirbit

பாடல் - 42

Check this out on Chirbit

பாடல் - 43

Check this out on Chirbit

பாடல் - 44

Check this out on Chirbit

பாடல் - 45

Check this out on Chirbit

பாடல் - 46

Check this out on Chirbit

பாடல் - 47

Check this out on Chirbit

பாடல் - 48

Check this out on Chirbit

பாடல் - 49

Check this out on Chirbit

பாடல் - 50

Check this out on Chirbit

பாடல் - 51

Check this out on Chirbit

பாடல் - 52

Check this out on Chirbit

பாடல் - 53

Check this out on Chirbit

பாடல் - 54

Check this out on Chirbit

பாடல் - 55

Check this out on Chirbit

பாடல் - 56

Check this out on Chirbit

பாடல் - 57

Check this out on Chirbit

பாடல் - 58

Check this out on Chirbit

பாடல் - 59

Check this out on Chirbit

பாடல் - 60

Check this out on Chirbit

பாடல் - 61

Check this out on Chirbit

பாடல் - 62

Check this out on Chirbit

பாடல் - 63

Check this out on Chirbit

பாடல் - 64

Check this out on Chirbit

பாடல் - 65

Check this out on Chirbit

பாடல் - 66

Check this out on Chirbit

பாடல் - 67

Check this out on Chirbit

பாடல் - 68

Check this out on Chirbit

பாடல் - 69

Check this out on Chirbit

பாடல் - 70

Check this out on Chirbit

பாடல் - 71

Check this out on Chirbit

பாடல் - 72

Check this out on Chirbit

பாடல் - 73

Check this out on Chirbit

பாடல் - 74

Check this out on Chirbit

பாடல் - 75

Check this out on Chirbit

பாடல் - 76

Check this out on Chirbit

பாடல் - 77

Check this out on Chirbit

பாடல் - 78

Check this out on Chirbit

பாடல் - 79

Check this out on Chirbit

பாடல் - 80

Check this out on Chirbit

பாடல் - 81

Check this out on Chirbit

பாடல் - 82

Check this out on Chirbit

பாடல் - 83

Check this out on Chirbit

பாடல் - 84

Check this out on Chirbit

பாடல் - 85

Check this out on Chirbit

பாடல் - 86

Check this out on Chirbit

பாடல் - 87

Check this out on Chirbit

பாடல் - 88

Check this out on Chirbit

பாடல் - 89

Check this out on Chirbit

பாடல் - 90

Check this out on Chirbit

பாடல் - 91

Check this out on Chirbit

பாடல் - 92

Check this out on Chirbit

பாடல் - 93

Check this out on Chirbit

பாடல் - 94

Check this out on Chirbit

பாடல் - 95

Check this out on Chirbit

பாடல் - 96

Check this out on Chirbit

பாடல் - 97

Check this out on Chirbit

பாடல் - 98

Check this out on Chirbit

பாடல் - 99

Check this out on Chirbit

பாடல் - 100

Check this out on Chirbit

நூற்பயன்

Check this out on Chirbit

Monday 14 December 2015

நூற்பயன்

ஆத்தாளை, எங்கள் அபிராம வல்லியை, அண்டமெல்லாம்
பூத்தாளை, மாதுளம்பூ நிறத்தாளை, புவி அடங்கக்
காத்தாளை, ஐங்கணைப் பாசாங்குசமும் கருப்புவில்லும்
சேர்த்தாளை, முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கும் இல்லையே.

பொருள்:

இந்த பாடலில், அபிராமி அந்தாதியை பாராயணம் செய்து, அன்னையை தொழுவார்க்கு கிடைக்கும் பலனை அபிராமி பட்டர் கூறுகிறார்.

அன்னை அபிராம வல்லி, இந்த அண்டத்தை பெற்றவள். ஸ்ரீ மாதா என்று லலிதா சஹஸ்ரநாமத்தில் முதல் நாமம், அன்னையே என்று துவங்குகிறது.

மாதுளம் பூ போல், இளஞ்சிவப்பு நிறத்தவள். சிந்தூராருண விக்ரஹாம் என்று லலிதா சஹஸ்ரநாமம் த்யானம் தொடங்குகிறது. சிந்தூரம் போல், சிவந்த மேனி உடையவள் அன்னை. அருணா என்றும் ஒரு பெயர் அவளுக்கு. மேலும் உத்யத் பானு சஹாஸ்ராபா என்றும் ஒரு நாமம். 1000 உதய சூரியர்களைப்போல் சிவந்த மேனி உடையவள் என்று இதற்கு பொருள்.

இந்த உலகை அருளாட்சி புரிந்து காப்பவள். ஸ்ரீ மகா ராக்ஞீ, ஸ்ரீ மத் சிம்ஹாசனேஸ்வரி, என்று அன்னையின் பரிபாலனத்தை விளக்கும் இரு நாமங்கள், சஹஸ்ரநாமத்தில் இரண்டாவது, மூன்றாவதாக வருபவை.

 ஐந்து மலர்களால் ஆன அம்பு, பாசம், அங்குசம், கரும்பு வில் ஆகியவற்றை தன் திருக்கரங்களில் ஒருங்கே ஏந்தியவள். ராகஸ்வரூப பாஷாட்யா, க்ரோதாங்காராங்குஷோஜ்வலா, மனோ ரூபேக்ஷு கோதண்டா, பஞ்ச தன்மாத்ர சாயகா என்று அடுத்து வரும் நாமங்கள் இந்த வரிகளை விளக்குபவை.

இத்தகு பெருமை வாய்ந்த முக்கண்களை உடையவளை (த்ரிநயனாம் என்று சஹஸ்ரநாமம் அன்னையை வர்ணிக்கிறது) தொழுவார்க்கு என்றும் நன்மையே. தீமை அணுகவே அணுகாது.

எல்லோரும் இன்புற்றிருக்க அன்னை அபிராமியை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.

பாடல் (ராகம் - மத்யமாவதி, தாளம் -- விருத்தம் --) கேட்க:

Check this out on Chirbit

Sunday 13 December 2015

பாடல் - 100

பலன்: அன்பால் இணைவோம்

குழையைத் தழுவிய கொன்றையந்தார் கமழ் கொங்கைவல்லி
கழையைப் பொருத திரு நெடுந்தோளும், கருப்பு வில்லும்
விழையைப் பொரு திறல் வேரியம் பாணமும், வெண் நகையும்
உழையைப் பொருகண்ணும் நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றவே!

பொருள்:
1. குழை - கூந்தல். கூந்தலை தழுவும் கொன்றை மலரால் கட்டப்பட்ட மாலையானது அன்னையின் மார்பின் மீதும் தழுவுகிறது. அதனால், அன்னையின் திருமார்பகங்களில், அந்த மலரின் வாசம் நிறைந்துள்ளது.

2. அன்னையின் தோள்கள், நெடுந்தோள்கள். தோள்கொடுப்பது என்றால், ஆறுதல் தருதல், அரவணைத்தல் ஆகும். அம்பாள் நம்மை அரவணைப்பவள். நமக்கு ஆறுதல் தருபவள். அதற்காகவே அன்னைக்கு பெரிய நெடுந்தோள்.

3. அன்னை தன் ஒரு கையில் அழகிய கரும்பு வில்லும், மற்றொரு கையில் 5 மலர்களாலான அம்புகளையும் வைதுள்ளாள்.

4. அன்னை, தன் அழகிய வெண் பற்களை காண்பித்து, குறுநகை புரிகிறாள். சுத்த வித்யாங்குரா கார த்விஜ பங்க்தி த்வயோஜ்வலா என்று ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம், அன்னையின் பற்கள் தூய அறிவு போல் வெண்மையானது, என்று வர்ணிக்கிறது.

5. மான் போன்ற மருண்ட கண்கள் உடையவள். மான் எப்போதும் எச்சரிக்கையாகவே பார்த்துக்கொண்டிருக்கும். அன்னையும், தன் குழந்தைகளாம் நம்மை காக்கும் பொருட்டு, அது போல இங்கும் அங்கும் பார்த்துக்கொண்டிருப்பாள்.

இதுபோன்ற அழகியவை நிறைந்த அன்னையின் திருமேனியே என் நெஞ்சில் நிறைந்திருக்கிறது. அந்த திருமேனியை என்றும் வழிபடுவேன்.

இவ்வாறு பட்டர் பாடுகிறார். நாமும் அவர் வழி நடப்போம்.

பாடல் (ராகம்: லலிதா, தாளம் - --விருத்தம்--) கேட்க:
Check this out on Chirbit

பாடல் - 99

பலன்: திருமணம் இனிதே நடந்தேறும்

குயிலாய் இருக்கும் கடம்பாடவியிடை, கோல வியன்
மயிலாய் இருக்கும் இமயாச்சலத்திடை, வந்து உதித்த
வெயிலாய் இருக்கும் விசும்பில், கமலத்தின் மீது அன்னமாம்
கயிலாயருக்கு அன்று இமவான் அளித்த கனங்குழையே

பொருள்:

கயிலயம் பதியாம் சிவபெருமானுக்கு, இமவான் அன்று தன் மகளை மணமுடித்து வைத்தான். கடம்ப வனத்தில் இருக்கும் குயில் போன்றவள் நம் அன்னை. அழகிய மயில் போல இமயத்தில் இருப்பவள். உதிக்கும் சூரியனாய், வன வெளியில் திகழ்பவள். அழகிய தாமரையில் வீற்றிருக்கும், அன்னப்பறவையினை ஒத்தவள்.

கடம்பவனம் - மதுரை. மதுரையில் மீனாக்ஷி, குயில் போன்றவள். சங்கீதத்திற்கு அதிபதி. குயில் அழகாக கூவும். இனிய குரல் உடையது. அதனால் மதுரையில் அன்னை குயிலாக வீற்றிருக்கிறாள் என்று சொல்வதுண்டு.

மயில் நாட்டியத்திற்கு பெயர் பெற்றது. இமய மலையில் நடன சபேசனுடன், நடனம் புரியும் மயிலாக அன்னை இருக்கிறாள்.

விசும்பு - ஆகாயம். சிதம்பரம் ஆகாய ஸ்தலம். பொன்னம்பலம் என்று பெயர் அவ்வூரிற்கு. அங்கு ஞான ஒளி வீசும் சூரியனாக சிவகாமசுந்தரி இருக்கிறாள்.

கமலத்தில் - கமலாலயம் - திருவாரூரில், கமலாம்பாள் அன்னம் வடிவில் வீற்றிருக்கிறாள்.

பாடல் (ராகம்: திலங், தாளம் - --விருத்தம்--) கேட்க:

Check this out on Chirbit

Friday 11 December 2015

பாடல் - 98

பலன்: வஞ்சகரின் செயலிலிருந்து விடுபடுவோம்

தைவந்து நின் அடித்தாமரை சூடிய சங்கரற்கு
கைவந்த தீயும், தலைவந்த ஆறும், கரந்தது எங்கே?
மெய்வந்த நெஞ்சின் அல்லால் ஒருகாலும் விரகர் தங்கள்
பொய்வந்த நெஞ்சில், புகல் அறியா மாடப் பூங்குயிலே

பொருள்:

அன்னை அபிராமி, மாடத்தில் வீற்றிருக்கும் பூங்குயில். அவள் உண்மை நிறைந்த நெஞ்சில் இருப்பாள். பொய்கள் நிரம்பிய வஞ்சகரின் நெஞ்சில் ஒருகாலும் நிறைய மாட்டாள். அந்த வஞ்சகம் நிறைந்த இடத்தில் புகுதல் அவள் அறியாததொன்று.

இப்படிப்பட்ட சத்யஸ்வரூபிணியாம் நம் அன்னயின் பாத கமலங்களை தன் தலையில் சிவபெருமான் (சங்கரர்) சூடியுள்ளார். அதன் மகிமையினால், தாருகா வன முனிவர்கள் எய்திய நெருப்பினை, எளிதில் கையில் ஏந்தினார். பகீரதனின் முயற்சியால், ஆகாயத்திலிருந்து பூமிக்கு வந்த கங்கையினையும் தன் தலையில் சூடிக்கொண்டார். நீர், நெருப்பு இவ்விரண்டின் தாக்கமும் அன்னையின் அருளால், மறைந்து விட்டன.

பாடல் (ராகம்: துர்கா , தாளம் - --விருத்தம்--) கேட்க:
Check this out on Chirbit

Thursday 10 December 2015

பாடல் - 97

பலன்: அவரவர் துறையில் சிறந்து விளங்குவோம்

ஆதித்தன், அம்புலி, அங்கி, குபேரன், அமரர் தம் கோன்,
போதிற் பிரமன், புராரி, முராரி, பொதிய முனி,
காதிப் பொருபடைக் கந்தன், கணபதி, காமன் முதல்
சாதித்த புண்ணியர் எண்ணிலர், போற்றுவர் தையலையே

பொருள்:

இப்பாடலில், என்றும் இளையவள், (தையல் - சிறிய வடிவம் கொண்டவள்), பாலா என்ற நாமம் கொண்டவளான அன்னை அபிராமியை, போற்றித் துதித்து, புண்ணியம் பெற்று, சாதனைகள் பல செய்து பெருமை பெற்றவர்கள் பலர் உள்ளனர் என்று பட்டர் பெருமைப்பட பாடுகிறார்/. எடுத்துக்காட்டாக அவர் குறிப்பிடுவது இவர்களை:

1. ஆதித்தன் - சூர்யன்
2. அம்புலி - நிலா, சந்திரன்
3. அங்கி - அக்னி தேவன்
4. குபேரன் - செல்வத்திற்கு அதிபதி
5. அமரர் தம் கோன் - தேவர்களின் தலைவன், இந்திரன்
6. போதிற் பிரமன் - தாமரையில் உதித்த பிரம்மா
7. முராரி - முரன் என்ற அசுரனை வென்ற திருமால்
8. புராரி - அசுரர்களின் திரிபுரத்தை எரித்த சிவ பெருமான்
9. பொதிய முனி - பொதிகை மலையில் வசிக்கும் அகஸ்தியர்
10. காதிப் பொருபடைக் கந்தன் - அசுரர்களை எதிர்த்து பெரும் போர் புரிந்த முருகப்பெருமான்
11. கணபதி - விநாயகர்
12. காமன் - சிவனால் எரிக்கப்பட்டு, அன்னையின் அருளால், ரதியின் கண்களுக்கு மட்டும் தெரியும் மன்மதன்

இந்த 12 பேர்களும், மிக முக்கியமான ஸ்ரீ வித்யா உபாசகர்கள் என்று பிரம்மாண்ட புராணம் கூறுகிறது.

இவர்களை போல் நாமும் அன்னையை வணங்கி, பல நன்மைகளைப் பெறுவோம்.

பாடல் (ராகம்: செஞ்சுருட்டி, தாளம் - --விருத்தம்--) கேட்க:

Check this out on Chirbit

Tuesday 8 December 2015

பாடல் - 96

பலன்: சகல கலைகளிலும் தேர்ச்சி பெறுவோம்

கோமள வல்லியை, அல்லியந்தாமரைக் கோயில் வைகும்
யாமள வல்லியை, ஏதம் இல்லாளை, எழுதரிய
சாமள மேனிச் சகலகலா மயில் தன்னை, தம்மால்
ஆமளவும் தொழுவார், எழு பாருக்கும் ஆதிபரே

பொருள்:

1. கோமள வல்லி - அழகிய பெண்
2. அல்லியந்தாமரைக் கோயில் வைகும் யாமள வல்லியை - அழகிய மென்மையான தாமரையினை இருப்பிடமாகக் கொண்டு உறையும் யாமள (இளமை ததும்பும்)வல்லி. தாமரை - கமலம். கோயில் - ஆலயம். கமலாலயம் - தாமரைக்கோயில். திருவாரூர் க்ஷேத்ரத்தில், தாமரையினை கோயிலாக அன்னை  அபிராமி,கமலாம்பாளாக அருள் புரிகிறாள்.
3. ஏதம் இல்லாள் - குற்றமற்றவள்
4. எழுதரிய சாமள மேனி - எழுத்தால் வர்ணிக்க முடியாத அழகிய கருநிற மேனி உடையவள். (ஷ்யாமே, ஷ்யாமளே என்று பெரியோர்கள் அம்பாளை அழைப்பார்கள்)
5. சகல கலா மயில் - அனைத்துக் கலைகளிலும் தேர்ந்தவள், மயில் போன்ற அழகு நிறைந்தவள்

இத்தகு பெருமை வாய்ந்த அன்னையை, தம்மால் முடிந்த அளவிற்கு வணங்குபவர்கள், நிச்சியம் ஏழு உலகிற்கும் அதிபர்கள் ஆவார்கள்.

பாடல் (ராகம்: பிருந்தாவன சாரங்கா, தாளம் - --விருத்தம் --) கேட்க:

Check this out on Chirbit

Monday 30 November 2015

பாடல் - 95

பலன்: நன்றும் தீதும் ஒன்றே என்று கருதும் மனோபாவம் பெறுவோம். சமதர்ஷனம் (equanimity) கிடைக்கும்

நன்றே வருகினும், தீதே விளைகினும், நான் அறிவது
ஒன்றேயும் இல்லை, உனக்கே பரம், எனக்கு உள்ள எல்லாம்
அன்றே உனது என்று அளித்து விட்டேன், அழியாத குணக்
குன்றே, அருட்கடலே, இமவான் பெற்ற கோமளமே

பொருள்:
அபிராமி, அழியா குணக்குன்று. த்ரிகுணாம்பா என்று ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் அழைக்கிறது. மூன்று குணங்களுக்கும் (சத்வம், ரஜஸ், தமஸ்) தலைவி என்று பொருள். குணத்ரய விபாவினி என்று தேவி மாஹத்மியத்தில், முதல் அத்தியாயம் மது கைடப வத வர்ணனையில், அம்பாளை பிரம்மா புகழ்கிறார்.

இமவான் பெற்ற கோமளம் - மலையரசன் ஹிமவான் பெற்ற அழகிய செல்வம். ஹைமவதி என்று அம்பாளுக்கு ஒரு நாமம். ஹேமம், ஹைமம் என்றால் தங்கம். இமயம் - தங்கம் போன்ற உயர்ந்த மலை.

அருட்கடல் - அருள் நிறைந்த கடல் அம்பாள்.

அன்னையே, அழியா குணக்குன்றே, அருட்கடலே, மலையரசன் பெற்ற அழகிய செல்வமே, எனக்கென்று ஒன்றும் வைத்துக்கொள்ளாது, எல்லாம் உன்னுடையது என்று ஆக்கிவிட்டேன். அதனால், நன்மையோ தீமையோ எதுவும் என்னை ஒன்றும் செய்யாது. இரண்டிற்கும் வேறுபாடு அறியாதவனாகி விட்டேன். விருப்பு வெறுப்பு அற்றவனானேன். உனக்கே பரம் என்று என்னை ஆக்கினேன். என்று பட்டர் பாடுகிறார்.

நமக்கும் இப்படி பட்ட சம தரிசனம் கிடைக்கட்டும்.

பகவத் கீதையில், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், "எவன் என்னுள் அனைத்தையும், அனைத்திலும் என்னையும் காண்கிறானோ, அவன் எப்போதும் என் அருகிலேயே இருக்கிறான். என்னை விட்டு விலகுவதே இல்லை." என்று கூறுகிறார். அதுபோல் அனைத்தும் இறைவனுடையது என்ற எண்ணம் நமக்கு இருந்தால், உலகத்தில் துன்பம் என்பதே கிடையாது. என்றும் இன்பமே. ஆனந்தமே.

பாடல் (ராகம்-நாதநாமக்ரியா, தாளம் - --விருத்தம்--) கேட்க:

Check this out on Chirbit

Thursday 26 November 2015

பாடல் - 94

பலன்: மன நோய் அகலும்

விரும்பித் தொழும் அடியார் விழிநீர் மல்கி, மெய் புளகம்
அரும்பித் ததும்பிய ஆனந்தம் ஆகி, அறிவு இழந்து
*சுரும்பின் களித்து, மொழி தடுமாறி, முன் சொன்ன எல்லாம்
தரும் பித்தர் ஆவர் என்றால் அபிராமி சமயம் நன்றே

பொருள்:

அபிராமி அம்மையை விரும்பித் தொழும் அடியவர்கள்:
1. அவர்களின்
  • கண்களில் ஆனந்த கண்ணீர் பெருகும்  
  • மெய் சிலிர்க்கும்
 2. அவர்களிடத்தே:
  • ஆனந்தம் மட்டுமே ததும்பும் 
3. அவர்கள்;
  • தன்னையே மறந்து, தேனில் மனம் களிப்புறும் வண்டுப்போல் மகிழ்வுற்றிருப்பார்கள்.
  • மொழி தடுமாறி, அன்னையை எவ்வாறு வர்ணிப்பது என்று தவிப்பார்கள். 
ஆனந்தத்தில் வார்த்தைகள் வருவது கடினம் அல்லவா?
இவ்வாறு பக்தியால் பித்தர்களை போல் அலைவார்கள். இப்படிப்பட்ட பேரானந்த நிலை தமக்கு கிடைக்க வேண்டும் என்றால், அபிராமியிடம் தஞ்சம் அடைய வேண்டும்.

*சுரும்பின் களித்து - சுரும்பு (தேன்). சில இடங்களில் கரும்பின் களித்து என்று வருகிறது. கரும்பும் இனிமை, தேனும் இனிமை. எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். முன்பு கூறியது போல், அம்பாளுக்கு சுரும்பார் குழலி என்று ஒரு பெயர். அப்படியானால் தேன் போல இனிய கூந்தலை உடையவள் என்று பொருள்.

பாடல் (ராகம் - புன்னாகவராளி, தாளம் - --விருத்தம்--) கேட்க:

Check this out on Chirbit

Wednesday 25 November 2015

பாடல் - 93

பலன்: உண்மை நிலையினை அறிவோம்

நகையே இது, இந்த ஞாலமெல்லாம் பெற்ற நாயகிக்கு
முகையே முகிழ் முலை, மானே முது கண் முடிவுயில், அந்த,
வகையே பிறவியும், வம்பே, மலைமகள் என்பதும் நாம்,
மிகையே இவள்தன் தகைமையை நாடி விரும்புவதே.

பொருள்:

இந்த உலகினை பெற்ற நாயகி அபிராமியின் முலைகள், தாமரை மொட்டு போன்றவை. அவள் கருணை ததும்பும் முதிர்ந்த* கண்கள், மானின் அழகிய கண்கள் போன்றவை. பிறப்பு இறப்பு இல்லாதவள். அதனால், முதலும்  முடிவும் இல்லாதவள் நம் அன்னை.

அவளை இப்படியெல்லாம் கவித்துவம் கொண்டு வர்ணிப்பது, சரியல்ல. ஏனென்றால் மான், தாமரை இவை எல்லாம் மிகவும் சிறியவை. சாமானியமானவை. அவற்றைக்கொண்டு மலைமகளான அன்னையை வர்ணிப்பது அவளின் பெருமையை குறைப்பதாகும். அது தனக்கு சிரிப்பை உண்டாக்குகிறது என்று பட்டர் கூறுகிறார்.

* முதிர்ந்த - அன்னை எல்லோருக்கும் பெரியவள். அதனால் அவள் கண்கள் முதிர்ந்தவை. அனைத்தையும் அறிந்த அனுபவம் மிக்க கண்கள் என்பதால், முதிர்ந்த கண்கள் என்று கூறுகிறார்.

பாடல் (ராகம்-பந்துவராளி, தாளம் - --விருத்தம்--) கேட்க:

Check this out on Chirbit

Thursday 19 November 2015

பாடல் - 92

பலன்: ஒரு கொள்கையில் பிடிப்பு உண்டாகும்

பத்தே உருகி, நின் பாதத்திலே மனம் பற்றி, உந்தன்
இதத்தே ஒழுக, அடிமை கொண்டாய்,  இனி, யான் ஒருவர்
மதத்தே மயங்கேன், அவர் போன வழியும் செல்லேன்,
முதல் தேவர் மூவரும், யாவரும் போற்றும் முகிழ் நகையே!

பொருள்:

முதல் தேவர் மூவரும் - மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன்

மும்மூர்த்திகள், மற்ற தேவர்கள் யாவரும் போற்றும், அழகிய நகையுடைய அன்னை அபிராமியே,  உன்னை பற்றிய ஞானத்தினை பெறுவதற்கே என் சித்தம் விரும்பும்படி வைத்தாய். என் மனம், என்றும் உன் பாதத்தை பற்றுவதிலேயே சிந்திக்கும்படி செய்தாய். என்னை உன் அடிமையாக ஆக்கிக் கொண்டாய். இனி, வேறொரு சமயத்தே நாட்டம் கொள்ள மாட்டேன். அந்த சமயத்தோர் செல்லும் வழியிலும் செல்ல மாட்டேன்.

பாடல் (ராகம் - சுத்த சாவேரி, தாளம் - --விருத்தம் --) கேட்க:

Check this out on Chirbit

Saturday 14 November 2015

பாடல் - 91

பலன்: உயர்ந்த பதவி கிடைக்கும்

மெல்லிய நுண் இடை மின் அனையாளை, விரிசடையோன்
புல்லிய மென் முலைப், பொன் அனையாளை, புகழ்ந்து, மறை
சொல்லிய வண்ணம் தொழும் அடியாரைத் தொழுமவர்க்கு,
பல்லியம் ஆர்த்து எழ, வெண் பகடு ஊறும் பதம் தருமே

பொருள்:

மின்னல் போன்ற மெல்லிய இடையினை உடையவள்.
விரிந்த சடை முடி உடைய சிவபெருமானோடு சேர்ந்து இருப்பவள். மெல்லிய முலை உடையவள்.
பொன் போல், ஒளி மிகுந்தவள்.

இப்படி பட்ட அபிராமியை, வேதம் சொன்னவாறு வணங்கும் அடியார்களை வணங்கும் அடியவர்கள் (அடியார்க்கு அடியார்) பெரும் பேறு என்னவென்றால்: பல இசைக்கருவிகள் முழங்க, இந்திரனின் வெள்ளை நிற யானையின் மேல் அமர்ந்து, பலரும் தொழ வலம் வருவார்கள்.

பாடல் (ராகம்-சுநாத வினோதினி, தாளம் - --விருத்தம் --) கேட்க:

Check this out on Chirbit

Wednesday 11 November 2015

பாடல் - 90

பலன்: குறைகள் நீங்கும். பிரிந்தவர் கூடுவர்.

வருந்தாவகை என் மனத்தாமரையினில் வந்து புகுந்து
இருந்தாள், பழைய இருப்பிடமாக, இனி எனக்கு
பொருந்தாதது ஒரு பொருள் இல்லை. - விண் மேவும் புலவருக்கு
விருந்தாக, வேலை மருந்தானதை, நல்கும் மெல்லியலே.

பொருள்:

விண் மேவும் புலவருக்கு விருந்தாக, வேலை மருந்தானதை, நல்கும் மெல்லியலே -

விஷ்ணு விண்மேவும் புலவருக்கு (தேவர்களுக்கு) விருந்தாக பாற்கடலில் தோன்றிய அமுதத்தை பகிர்ந்து அளித்தார். அதற்கு உறுதுணையாக இருந்தவள், மெல்லிய இடையுடைய நம் அன்னை அபிராமி. இவ்வாறு பட்டர் கூறுவதற்கு காரணங்கள் இரண்டு.

1. பாற்கடலை தேவர்கள், அசுரர்கள் இருவரும் கடையும்போது, முதலில் தோன்றியது ஆலகால விஷம். அதனை சிவபெருமான் உண்டார். விஷத்தை உண்டால் மாய்ந்து விடுவோம். எனினும் அவர் தைரியமாக உண்டார். எப்படி?

அபிராமியின் மாங்கல்ய பலத்தின் மேல் அவர்க்கு உள்ள நம்பிக்கையால். தன் மனைவியின் (அபிராமி அன்னை) தாடங்கங்கள், தான் கட்டிய திரு மாங்கல்யம் இவ்விரண்டும் அன்னையிடம் இருக்கும் வரை தனக்கு ஒரு ஆபத்தும் நேராது என்ற தைரியம்.

அதேபோல், அவர் உண்டதும் அன்னை பார்வதி, விரைந்து சென்று தன் கணவரின் கழுத்தை அழுத்தி பிடித்தாள். அதனால் விஷம் உள்ளே செல்லாமல், வெளியிலும் வராமல், சிவனின் கழுத்திலேயே  நின்றது. அந்த இடம் நீலமாக மாறியது. அவர் நீலகண்டன் ஆனார்.

விஷம் உள்ளே சென்றிருந்தால் சிவன் மாண்டிருப்பார். வெளியே வந்தால் உயிர்கள் அனைத்தும் (நாம்) மாண்டிருக்கும்.

2. திருக்கடையூரில் அபிராமியின் துணைவர் அம்ருத கடேஸ்வரர். அமுதீசர் என்று அபிராமி பட்டர் அபிராமி அம்மை பதிகத்தில் பாடியுள்ளார். "அமுதீசர் ஒருபாகம் அகலாத சுக பாணி அருள்வாமி அபிராமியே!" என்று ஒவ்வொரு பாடலின் முடிவிலும் வரும். பிரளய காலத்தில், நீரில் எல்லாம் மூழ்க, அமிர்தம் ஒரு கடத்தில் (குடம்) மிதந்து வந்து இந்த கடையூரில் நின்றது. அதனை தன் கையில் ஏந்தி விஷ்ணுவிடம் கொடுத்தவர் நம் பெருமான் சிவன். அதனால் அவர் இத்தலத்தில் அம்ருத கடேஸ்வரர்.

இவ்வாறு தேவர்களுக்கு அமுதம் கிடைக்க காரணமான அபிராமி அன்னை, அடியவன் தன் (பட்டர்) மனத்தாமரையில் வந்து புகுந்தாள். தனது பழைய இருப்பிடம் அதுவே (அடியார்களின் மனம்) என்று உரிமையோடு வந்து அமர்ந்தாள். அன்னையே வந்துவிட்டாள். அதனால் இனி அடியவர்களுக்கு கிடைக்க வேண்டிய பொருள் வேறெதுவும் இல்லை. தான் இனி வருத்தப்பட வேண்டியது இல்லை. ஏனெனில் தனது பிறப்பு இறப்புகளை அன்னை அறுத்தெறிந்துவிட்டாள்.

பாடல் (ராகம் - சிந்து பைரவி, தாளம் - --விருத்தம்--) கேட்க:


Check this out on Chirbit

பாடல் - 89

பலன்: அன்னையின் நினைவு என்றும் நம் சிந்தையில் நிலைத்திருக்கும்

சிறக்கும் கமலத் திருவே, நின் சேவடி சென்னி வைக்கத்,
துறக்கம் தரும் நின் துணைவரும், நீயும், துரியம் அற்ற
உறக்கம் தர வந்து, உடம்போடு உயிர் உறவு அற்று, அறிவு
மறக்கும் பொழுது, என் முன்னே வரல் வேண்டும் வருந்தியுமே.

பொருள்:

சிறந்த தாமரையில் வீற்றிருக்கும் செல்வமே, அபிராமியே, என் உடலுக்கும் உயிருக்கும் தொடர்பு இன்றி, அறிவு மறதி மிகுந்திருக்கும் சமயத்தில் (மூப்பு) உன் பாதம் என் தலை மீது இருக்க வேண்டும். மேலும் அடியார்களுக்கு மோன நிலையினை தரும் உன் துணைவர் சிவபெருமானும், நீயும் என் முன்னே வந்து, எனக்கு மோன நிலையினை (சமாதி) தர வேண்டும்.

பாடல் (ராகம்-லதாங்கி, தாளம்- --விருத்தம்--) கேட்க:


Check this out on Chirbit

Friday 6 November 2015

பாடல் - 88

பலன்: அபிராமியிடம் சரணடைவோம்

பரம் என்று உன்னை அடைந்தேன், தமியேனும், உன் பத்தருக்குள்
தரம் அன்று இவன் என்று தள்ளத்தகாது - தரியலர் தம்
புரம் அன்று எரியப் பொருப்புவில் வாங்கிய போதில், அயன்
சிரம் ஒன்று செற்ற கையான், இடப்பாகம் சிறந்தவளே

பொருள்:

தரியலர் - அசுரர், புரம் - ஊர் (திரிபுரம்)
அசுரர்களின் இடமான திரிபுரத்தினை, அன்று மேருமலையினை வில்லாக கொண்டு, அதிலிருந்து அம்பு எய்தி அழித்தவரும், அயன் - பிரம்மாவின் 5 தலைகளுள் ஒன்றினை கொய்தவருமான சிவபெருமானின், இடப்பாகத்தில் சிறப்பாக வீற்றிருக்கும் அபிராமி அன்னையே, நீயே பரம் என்று உன்னை சரணடைந்தேன். ஒன்றும் அறியாதவன் நான். தமியேன் - எளியவன். என்னை உன் பக்தர்களுக்குள் தரமற்றவன் என்று ஒதுக்கிவைக்கக் கூடாது. அவ்வாறு செய்தால் அது சரியல்ல.

பாடல் (ராகம் - தர்மவதி, தாளம் - விருத்தம் --) கேட்க:


Check this out on Chirbit

Tuesday 3 November 2015

பாடல் - 87

பலன்: செய்ய முடியாதவற்றை சிறப்பாக செய்து முடித்து புகழ் பெறுவோம்

மொழிக்கும் நினைவுக்கும் எட்டாத நின் திரு மூர்த்தி, எந்தன்
விழிக்கும் வினைக்கும் வெளி நின்றதால், விழியால் மதனை
அழிக்கும் தலைவர், அழியா விரதத்தை, அண்டமெல்லாம்
பழிக்கும் படி, ஒரு பாகம் கொண்டு ஆளும் பராபரையே

பொருள்:

மன்மதன், சிவபெருமான் மீது மலர் அம்புகளை, தனது கரும்பு வில்லிலிருந்து எய்தியதால், அவரின் தவம் கலைந்தது. அதனால் சினம் கொண்டு, மன்மதனை தன் நெற்றிக்கண்ணினால் எரித்தார் சிவபெருமான். தனது தவம் ஒருவராலும் அழிக்கப்பட முடியாதது என்று பறை சாற்றினார். அப்படி ஒரு உணர்ச்சியின்றி இருந்த சிவபெருமானின், அழிக்க முடியா தவத்தை, கலைத்து, உலகம் அவரை பழிக்குமாறு, அவரின் ஒரு பாகத்தில் அம்பாள் சென்று அமர்ந்தாள்.

அவள் பரம்பொருளுக்கு பரம்பொருள்.அவளே பராபரை என்று பட்டர் இங்கு பாடுகிறார். அப்படிப்பட்ட பராபரை, சிவனுக்கு மட்டும் அகப்படுபவள்.

வேறு எவராலும் சொல்லால் வர்ணிக்கப்பட முடியாத திரு உருவம் உடையவள். வேறெவர் மனத்திலும் அகப்படாதவள், தனது விழிக்கு தெரிந்தாள். தான் செய்யும் செயலில் இருந்தாள். எளியவனான தன்னிடம் இவ்வளவு கருணை கொண்டமைக்கு எப்படி நன்றி தெரிவிப்பது என்று உருகி பாடுகிறார் அபிராமி பட்டர்.

பாடல் (ராகம்-சிவசக்தி, தாளம் - விருத்தம்--) கேட்க:

Check this out on Chirbit

Sunday 1 November 2015

பாடல் - 86

பலன்: பயம் நீங்கும்

மால் அயன் தேட, மறை தேட, வானவர் தேட, நின்ற
காலையும், சூடகக் கையையும், கொண்டு, கதித்த கப்பு
வேலை வெங்காலன் என்மேல் விடும் போது, வெளி நில் கண்டாய்,
பாலையும் தேனையும் பாகையும் போலும் பணிமொழியே.

பொருள்;

பால், தேன், வெல்லப்பாகு இவற்றின் இனிப்பினைப் போன்ற இனிய குரல் உடைய அபிராமியே, கப்பு வேல் -> கூறிய வேலினை, காலன் என் மேல் எறியும் போது, நீ என்முன் வந்து "பயப்படாதே" என்று கூறுவாயாக. உனது சங்கு வளையல்கள் அணிந்த கைகளையும், பாதங்களையும், மால்(விஷ்ணு), அயன்(பிரம்மா), மறை (வேதங்கள்), வானவர் (தேவர்கள்) ஆகியோர் தேடி, காண்பதற்கு முயற்சித்தனர். எனினும் அவர்களால் காண முடியவில்லை. அவ்வாறு இருக்க, பக்தனான என்முன் நீ வர வேண்டும்.

சூடகக் கை - சங்கு வளையல்கள் அணிந்த கைகள்.  சூடகம் - சங்கு

பாடல் (ராகம் - மாண்டு, தாளம் - ஆதி) கேட்க:

Check this out on Chirbit

Wednesday 28 October 2015

பாடல் - 85

பலன்: நல்வழி கிடைக்கும்

பார்க்கும் திசைதொறும் பாசாங்குசமும், பனிச் சிறை வண்டு
ஆர்க்கும் புதுமலர் ஐந்தும், கரும்பும், என் அல்லல் எல்லாம்
தீர்க்கும் திரிபுரையாள் திருமேனியும், சிற்றிடையும்,
வாரக் குங்கும முலையும்,  முலைமேல் முத்து மாலையுமே

பொருள்:

நான் பார்க்கும் திசைகளில் எல்லாம், என் அல்லல் தீர்க்கும் திரிபுரையான, அபிராமியின் கையில் இருக்கும் பாசம், அங்குசம், கரும்பு வில், வண்டுகளை கவர்ந்து, தன்னுள் சிறைபிடித்து வைத்திருக்கும், என்றும் புதியதாய் இருக்கும் 5 மலர்கள், மற்றும் அவள் திருமேனி, சிறிய இடை, குங்குமம் பூசப்பட்ட மார்பகங்கள், அந்த திரு மார்பில் தவழும் முத்துமாலை ஆகியவற்றையே காண்கிறேன்.

பாடல் (ராகம் - ஹுசேனி, தாளம் - ஆதி, திஸ்ர நடை) கேட்க:

Check this out on Chirbit

Monday 26 October 2015

பாடல் - 84

பலன்: அனைத்தும் கிடைக்கப்பெறுவோம்.

உடையாளை, ஒல்கு செம்பட்டு உடையாளை, ஒளிர்மதி செஞ்
சடையாளை, வஞ்சகர் நெஞ்சு அடையாளை, தயங்கு நுண்ணூல்
இடையாளை, எங்கள் பெம்மான் இடையாளை, இங்கு என்னை இனிப்
படையாளை, உங்களையும் படையா வண்ணம் பார்த்திருமே

பொருள்:

உடையாளை - அனைத்தையும் தன் வயம் உடையவள். உடையவர் என்று சிவபெருமானுக்கு பெயர். அவரின் சக்திக்கு உடையாள் என்று ஒரு பெயர்.

ஒல்கு செம் பட்டு உடையாளை - தனது மெல்லிய இடையில், அழகிய சிவப்பு நிற பட்டாடையினை உடுத்தியுள்ளாள்.

ஒளிர்மதி செஞ்சடையாளை - ஒளி வீசும் பிறைச் சந்திரனை தன் செஞ்சடையில் அணிந்துள்ளாள். இன்னொரு விதமாக பொருள் கொண்டால், பிறையணி செஞ்சடையன், சிவனின் மனைவி. அதனால் செஞ்சடையாள் என்றும் கொள்ளலாம்.

வஞ்சகர் நெஞ்சு அடையாளை - வஞ்சனை நிறைந்த நெஞ்சத்தில் வசிக்க மாட்டாள்.

தயங்கு நுண்ணூல் இடையாளை - மெல்லிய, நூல் போன்ற இடையினை உடையவள்.

எங்கள் பெம்மான் இடையாளை - எம்பெருமான் சிவனின் இடபாகத்தில் இருப்பவள்.

இங்கு என்னை இனிப் படையாளை - இவ்வுலகில், நான் மீண்டும் பிறவாமல் என்னை பார்துக்கொள்பவள்.

உங்களையும் படையா வண்ணம் பார்த்திருமே - நீங்களும் அவளை வணங்கினால், உங்களையும் மீண்டும் பிறவாமல் பார்த்துக்கொள்வாள்.

பாடல்(ராகம் - தேஷ், தாளம் - -- விருத்தம் ---) கேட்க:

Check this out on Chirbit

Sunday 25 October 2015

பாடல் - 83

பலன்: அனைத்தும் கிடைக்கப்பெறுவோம்.

விரவும் புதுமலர் இட்டு நின் பாத விரைக்கமலம்
இரவும் பகலும் இறைஞ்ச வல்லார், இமையோர் எவரும்
பரவும் பதமும், ஐராவதமும், பகீரதியும்
உரவும், குலிசமும், கற்பகக் காவும் உடையவரே.

பொருள்:

தேன்சிந்தும், புதிய மலர்களைக் கொண்டு (அன்று மலர்ந்த மலர்) அன்னையின் பாதத் தாமரையினை, இரவும் பகலும் (எந்நேரமும்) பூஜை செய்பவர்கள்,

1. தேவர்கள் யாவரும் விரும்பும் இந்திரப்பதவி

2. ஐராவதம் என்கிற வெள்ளை நிற யானை (இந்திரனின் வாஹனம்)

3. பகீரதி - ஆகாய கங்கை. விஷ்ணு வாமனனாக அவதாரம் செய்து, மஹா பலி சக்ரவர்த்தியிடமிருந்து, 3 அடி மண் கேட்டப்பின், முதல் அடியாக, த்ரிவிக்ரம அவதாரம் செய்து (விஸ்வரூபம்) வான் நோக்கி தன் காலைத் தூக்கினார். அப்போது, பிரம்மா இருக்கும் சத்யலோகம் வரை, இந்த அண்டத்தை பிளந்து அந்த திருவடி சென்றது. அப்போது, அந்த பாதத்திற்கு, பிரம்மா, தன் கமண்டலத்திலிருந்து, நீரை ஊற்றி, அபிஷேகம் செய்தார். அந்த நீரே ஆகாய கங்கையாக தோன்றியது. அதனை பூமிக்கு கொண்டு வர பகீரதன் கடினமாக முயற்சி செய்தான். அதனால், கங்கை, பகீரதி என்ற பெயரால் அழைக்கப்பட்டாள். பகீரதன் கொண்டு வந்த நதியினை, நேரே பூமிக்கு விட்டால், பூமி தாங்காது என்பதால், சிவபெருமான், தன் சடையினை அவிழ்த்து, கங்கையை தன் தலையில் தாங்கி, பின் மெதுவாக பூமிக்கு விட்டார்.

4. உரவும் குலிசம் - வலிமையான வஜ்ராயுதம் (இந்திரனின் ஆயுதம்). உர - வலிமை.

5. கற்பக விருட்சம்

ஆகியவற்றை பெறுவார்கள்.

(இமையோர் - தேவர்கள் - அவர்கள் கண்களை ஒரு பொழுதும் இமைக்க மாட்டார்கள். நளன் கதையில், தமயந்தி இவ்வாறுதான் உண்மையான நளனை மற்ற தேவர்களிடமிருந்து, தன் சுயம்வரத்தில் கண்டு பிடித்தாள்).

பாடல் (ராகம் - கமாஸ், தாளம் ----விருத்தம்---) கேட்க:

Check this out on Chirbit

Friday 23 October 2015

பாடல் - 82

பலன்: ஞாபக சக்தி அதிகரிக்கும்

அளியார் கமலத்தில் ஆரணங்கே, அகிலாண்டமும் நின்
ஒளியாக நின்ற ஒளிர் திருமேனியை, உள்ளுந்தொறும்
களியாகி, அந்தக்கரணங்கள் விம்மி, கரைப்புரண்டு,
வெளியாய் விடின், எங்ஙனே மறப்பேன், நின் விரகினையே!

பொருள்:

தேன்ததும்புவதால், வண்டுகள் மொய்க்கும், அழகிய தாமரையில் வீற்றிருக்கும் அழகிய பெண்ணே,  இந்த அண்டம் முழுவதிலும் ஒளியாக, உனது ஒளிவீசும் திருமேனி பரவியுள்ளது. அத்திருமேனியை நான் என் உள்ளத்துள் நினைத்து வருவதால், என் உள்ளத்தில், மகிழ்ச்சி பெருகி, பொங்குகிறது. அந்த களிப்பானது, விம்மி, கரைப்புரண்டு ஆகாயத்திற்கு சென்று அதில் கலந்துவிடுகிறது. இப்படிப்பட்ட பேரானந்தத்தில் என்னை மிதக்க செய்த உன் அருளை எப்படி மறப்பேன்? ஒரு போதும் அது மறக்க முடியாதது.

அம்பாளுக்கு அவ்யாஜ கருணா மூர்த்தி என்று லலிதா சஹஸ்ரநாமத்தில் ஒரு நாமம். கரை இல்லா கருணைக்கடல் அவள். பக்தர்களுக்கு என்றால், அவள் கணக்கே பார்க்காமல் கருணைப்பொழிவாள்.

பக்த விஸ்வாசினி என்று ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதர் தனது "பரதேவதா ப்ரஹத் குசாம்பா" (திருவிடைமருதூர், ப்ரஹத் குசாம்பாள் மீது பாடிய பாடல்) என்ற தன்யாசி ராக பாடலில் பாடியுள்ளார். பக்தர்களிடம் அப்படி ஒரு விஸ்வாசம் அம்பாளுக்கு. கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருவாள் அன்னை. அதானாலோ என்னவோ, இப்பாடல், அம்பாள் எழுந்தோடி வருவாள் என்பதால் தோடி ராகத்தில் அமைந்தது.

பாடல் (ராகம்-தோடி, தாளம் - ஆதி) கேட்க:

Check this out on Chirbit

Thursday 22 October 2015

பாடல் - 81

பலன்: நன்னடத்தை உண்டாகும்

அணங்கே, அணங்குகள் நின் பரிவாரங்கள். ஆகையினால்
வணங்கேன், ஒருவரையும் வாழ்த்துகிலேன், நெஞ்சில் வஞ்சகரோடு
இணங்கேன், எனது உனது என்றிருப்பார் சிலர் யாவரோடும்,
பிணங்கேன், அறிவு ஒன்றிலேன், என் கண் நீ வைத்த பேரளியே.

பொருள்:

அழகிய பெண்ணே, அபிராமியே, மற்ற சக்திகள் யாவரும் உனது பரிவார தேவதைகள் தான். அதனால் அவர்களை வணங்க மாட்டேன். வேறொருவரையும் வாழ்த்த மாட்டேன். நெஞ்சில் வஞ்சனை நிறைந்தவரோடு சேர மாட்டேன். தன்னுடையது என்று கருதாமல், எல்லாம் அன்னையான உன்னுடையது என்று கருதும் சில அடியார்களோடு மட்டும் சேர்ந்திருப்பேன். அவர்களிடமிருந்து அகலமாட்டேன். அறிவற்றவன் நான். ஆனாலும் என் மீது பெருங்கருணை வைத்துள்ளாய் நீ.

என்று பட்டர் பாடுகிறார்.

பாடல்( ராகம்-ஆனந்த பைரவி, தாளம் - மிஸ்ர சாபு) கேட்க:

Check this out on Chirbit

Tuesday 20 October 2015

பாடல் - 80

பலன்: எல்லை இல்லா ஆனந்தம் அடைவோம்

அன்னையை கண்ட பின் பட்டர் பாடிய பாடல் அல்லவா? அதன் பின் ஆனந்தமயமே! வேறொன்றுமில்லை.

கூட்டியவா என்னைத் தன் அடியாரில், கொடிய வினை
ஒட்டியவா, என் கண் ஓடியவா, தன்னை உள்ள வண்ணம்
காட்டியவா, கண்ட கண்ணும் மனமும் களிக்கின்றவா,
ஆட்டியவா நடம், ஆடகத் தாமரை ஆரணங்கே!

ஆடகத் தாமரை ஆரணங்கே - தடாகத்தில் பூத்திருக்கும் தாமரையில் அமர்ந்திருக்கும் அழகிய பெண்ணே! அபிராமியே!

என்னை உன் அடியார் கூட்டத்தில் சேர்த்தவளே! எனது கொடிய வினைகளை அழித்தவளே! எனது கண்ணின் முன் வந்தவளே! உன்னை உள்ளவண்ணம், ஒன்றுமே அறியாத எனக்கு காட்டியவளே! உன்னை கண்ட என் கண்களும், அனுபவித்த மனமும் மகிழ்ச்சியில் மிதக்கின்றன. என்னிடம் இப்படி நாடகமாடி, பின் நல்ல விதமான முடிவு ஒன்று வரவழைத்தவளே! உன் கருணையை என்னவென்று சொல்வது?!

இவ்வாறு உணர்ச்சி பொங்க, அபிராமி பட்டர், அன்னையை கண்டதும் பாடி பரவசம் அடைகிறார். நாமும் நம் மனக்கன்ணினால் அன்னையை காண்போம். களிப்புறுவோம்!

பாடல் (ராகம்-கௌரி மனோஹரி, தாளம் - ஆதி) கேட்க:

Check this out on Chirbit

Monday 19 October 2015

பாடல் - 79

பலன்: நல்ல சங்கம் (சத்சங்கம்) கிடைக்கும்

விழிக்கே அருள் உண்டு அபிராம வல்லிக்கு, வேதம் சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சு உண்டு, எமக்கு அவ்வழி கிடக்க,
பழிக்கே சுழன்று, வெம் பாவங்களே செய்து பாழ்நரகக்
குழிக்கே அழுத்தும் கயவர் தம்மோடு என்ன கூட்டு இனியே?

பொருள்:

இப்பாடல் பாடும் போது, அன்னை பட்டருக்கு காட்சி கொடுத்து, தன் காதணி ஒன்றினை கழற்றி வானில் எரிந்து, தை அமாவாஸ்யை தினத்தன்று பூரண நிலவுலாவும் பௌர்ணமியாக ஒரு க்ஷணம் மாற்றி அனைவருக்கும் அவளின் மகிமையினையும், பட்டரின் பக்தியின் பெருமையினையும் உலகுக்கு காண்பித்தாள். நமக்கும் அவளின் காட்சி கிடைக்கட்டும்.

அபிராமியின் கண்களில் இயற்கையாகவே அருள் நிறைந்து இருக்கும். வேதம் சொன்னவாறு அவளை வழிபட தனக்கும் (பட்டருக்கும்) மனம் உண்டு. இவ்வாறு ஒரு வழி இருக்க, அதில் செல்லாமல், பழி, பாவம் சேரும் வழியில் சென்று, தீய செயல்கள் செய்து, மீள முடியாத நரகத்தினுள் தள்ளப்பட்டு துன்பப்படும் கயவர்களோடு எதற்காக சேர வேண்டும்? அன்னையின் துணையே சாலச்சிறந்தது.

பாடல் (ராகம்-மோகன கல்யாணி, தாளம் - ஆதி) கேட்க:


Check this out on Chirbit

Saturday 17 October 2015

பாடல் - 78

பலன்: தீர்க்க சுமங்கலியாக பெண்கள் விளங்குவார்கள்

செப்பும் கனக கலசமும் போலும் திருமுலை மேல்
அப்பும் களப, அபிராம வல்லி, அணிதரளக்
கொப்பும், வைரக் குழையும், விழியன் கொழுங்கடையும்,
துப்பும் நிலவும் எழுதி வைத்தேன் என் துணை விழிக்கே

பொருள்:

சிவந்த மாணிக்கங்கள் (செப்பும்) நிறைந்த பொன்னால் (கனக) ஆன குன்று (கலசம்) போல் விளங்கும் அபிராமி அன்னையின் திருமுலைகளின் மேல், வாசனை நிறைந்த சந்தனம் (களப) பூசப்பட்டுள்ளது. அந்த திருமார்பில் பல அணிகலன்கள் திரளாக சூடப்பட்டுள்ளன. முத்து கொப்பும், வைரத் தோடும் (குழை - தோடு) அணிந்துள்ளாள் நம் அன்னை. அன்னையின் கடைக்கண் பார்வையும் அவளுக்கு ஒரு அணிகலனாக உள்ளது. அன்னையின் திருமுகமோ, குளிர்ச்சியினை உமிழும் பூர்ண சந்திரன் போல் உள்ளது.இவற்றை நம் மனக்கண்களில் இருத்தி நினைத்தால், நமக்கு எப்போதும் அன்னை துணையாக இருப்பாள்.

பாடல் (ராகம் - ரவி சந்திரிகா, தாளம் - ஆதி) கேட்க:

Check this out on Chirbit

இப்பாடல் அபிராமி பட்டர் பாடிய பின், அடுத்து வரும் பாட்டின் போது அன்னையின் தரிசனம்  கிடைத்தது. விரைவில் அடுத்த பாடலினை அனுபவிப்போம்.

Friday 16 October 2015

பாடல் - 77

பலன்: பகை நீங்கும்

பைரவி, பஞ்சமி, பாசாங்குசை, பஞ்சபாணி, வஞ்சர்
உயிர் அவி உண்ணும் உயர் சண்டி, காளி, ஒளிரும் கலா
வைரவி, மண்டலி, மாலினி, சூலி, வராஹி - என்றே
செயிர் அவி நான் மறை சேர் திருநாமங்கள் செப்புவரெ

பொருள்:

இப்பாடலில், மறைகள் எவ்வாறெல்லாம் அம்பாளை அழைக்கின்றன என்று பட்டர் பாடுகிறார்.

பைரவி - பைரவரின் தேவி - பைரவி பகமாலினி என்கிறது லலிதா சஹஸ்ரநாமம்.

பஞ்சமி - திதி தேவிகள் 16 பேரில் (பிரதமை முதல் சதுர்தசி 14 + அமாவாஸ்யை, பௌர்ணமாஸ்யை =16) , பஞ்சமி என்ற திதிக்கு தனி சிறப்பு உண்டு. அம்பாளின் திருநாமங்களில் அதுவும் ஒன்று. அம்பாளின் சேனாதிபதி தண்டநாதை என்கிற வாராஹியின் பெயர் பஞ்சமி. பஞ்சமி பஞ்ச பூதேசி பஞ்ச சங்க்யோபசாரிணி என்கிறது லலிதா சஹஸ்ரநாமம். ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவர் ஜகத்குரு ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், அம்பாளுக்கு 5 என்னும் எண் மிகவும் பிடித்த எண் என்று கூறியுள்ளார். அவளின் கணவன் நமசிவாய என்ற பஞ்சாக்ஷரன் என்பதாலோ என்னவோ!

பஞ்ச சங்க்யோபசாரம் என்று அம்பாளை வழிபடும் முறையை பற்றி கூறியுள்ளார். வெள்ளி முதல் செவ்வாய் வரை 5 நாட்களுக்கு தொடர்ந்து அம்பாள் சன்னிதிக்கு சென்று 5 முறை வலம் வந்து 5 முறை நமஸ்காரம் செய்தால் அம்பாள் த்ருப்தி அடைந்து வேண்டிய வரங்களை அளிப்பாள் என்று கூறியுள்ளார்.

பாசாங்குசை - பாசம், அங்குசம் ஆகியவற்றை கையில் தரிப்பவள். ராக ஸ்வரூப பாஷாட்யா - க்ரோத -ஆங்கார - அங்குஷோஜ்வலா என்கிறது ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம்.

பஞ்சபாணி - 5 மலர்களால் ஆன 5 அம்புகளை வைத்துள்ளவள். - பஞ்ச தன்மாத்ர சாயகா என்கிறது ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம்.

வஞ்சர் உயிர் அவி உண்ணும் உயர் சண்டி - வஞ்சனை உடையவர்களின் உயிரினை பறித்து ரத்தத்தினை குடிக்கும் பெருமை மிகு சண்டி. சண்டிகை என்று கூறுவார்.

காளி - மஹா காளி.

ஒளிரும் கலா வைரவி - பிறை சந்திரனை சூடிய வைரவி. கலை (art) என்பது வளர்ந்துக்கொண்டே இருக்க வேண்டிய ஒன்று. அதை குறிக்கும் வண்ணமாக கலைமகளான சரஸ்வதி தேவி, குருவான தக்ஷிணா மூர்த்தி ஆகியோர் மூன்றாம் பிறையினை, சந்திர கலையினை தலையில் அணிந்திருப்பார்கள்.

மண்டலி - சந்திர, சூர்ய, அக்னி மண்டலங்களில் வசிப்பவள். சந்திர மண்டல மத்யகா, பானு மண்டல மத்யஸ்தா, வன்னி மண்டல வாஸினி என்கிறது லலிதா சஹஸ்ரநாமம்.

மாலினி - மாலைகளை அணிந்தவள்.

சூலி - சூலத்தை ஏந்தியவள்

வராஹி - வாராஹி, வராஹ மூர்த்தியின் சக்தி.

இவ்வாறு உயர்ந்த வேதங்கள் கூறிய நாமங்களை, அம்பாளின் அடியவர்கள் மீண்டும் மீண்டும் கூறிக்கொண்டே இருப்பார்கள்.

பாடல் (ராகம் - பைரவி, தாளம் - ஆதி) கேட்க:

Check this out on Chirbit

Wednesday 14 October 2015

பாடல் - 76

பலன்: கணவன் மனைவி ஒற்றுமை பெருகும்

குறித்தேன் மனத்தில் நின் கோலம் எல்லாம், நின் குறிப்பு அறிந்து
மறித்தேன் மறலி வருகின்ற நேர்வழி, வண்டு கிண்டி
வெறித் தேன் அவிழ் கொன்றை வேணிப் பிரான் ஒரு கூற்றை, மெய்யில்
பறித்தே, குடிபுகுதும் பஞ்ச பாண பைரவியே

பொருள்:

5 பாணங்கள் (அம்புகள்) கொண்ட பைரவியே, அன்னை அபிராமியே, உனது வடிவங்கள் அனைத்தையும் என் மனத்தில் குறித்துக்கொண்டேன். அதனால், எனக்கு கிடைத்த உன் அருளின் துணைக்கொண்டு, யமன் (மறலி) வரும் வழி என்னவென்று கண்டுகொண்டேன். அதுமட்டும் அல்ல, அவ்வழியினை அடைத்தும் விட்டேன்.

வண்டுகள் மொய்க்கும் (வண்டு கிண்டி), தேன் நிரம்பிய (வெறித் தேன்), இனிய கொன்றை மலர்களை மாலையாக அணிந்த சிவபெருமானின் (அவிழ் கொன்றை வேணி பிரான்), உடலில் ஒரு பகுதியை (ஒரு கூற்றை), தனதாக்கிக்கொண்ட தாயே!

என்று உள்ளம் உருக அபிராமி பட்டர் பாடுகிறார். நாமும் சிவ-வாம-பாக-விஹாரிணி யான அம்பாளை பாடுவோம்.

பாடல் (ராகம் - கௌளிபந்து, தாளம்-ஆதி) கேட்க:

Check this out on Chirbit

Tuesday 13 October 2015

பாடல் - 75

பலன்: விதியை வெல்வோம்

தங்குவார் கற்பக தருவின் நிழலில், தாயார் இன்றி
மங்குவார், மண்ணில் வழுவாப் பிறவியை, மால் வரையும் ,
பொங்குவார் ஆழியும், ஈரேழ் புவனமும், பூத்த உந்திக்
கொங்குவார் பூங்குழலாள் திருமேனி குறித்தவரே

பொருள்:

மால் வரையும் - பெரிய மலை
பொங்குவார் ஆழி - நுரை ததும்பும் அலைகள் உடைய கடல்
ஈரேழ் புவனம் - 2 x 7 = 14 உலகங்கள்

பெரிய மலை, அலை கடல், 14 லோகங்கள் ஆகியவற்றை பெற்ற தாய் அபிராமி.

பூத்த உந்திக் கொங்குவார் பூங்குழலாள் - அழகிய மலர்களை தன் தலையில் சூடியுள்ளாள். அதனால்அபிராமி அன்னை, பூங்குழலாள் என்று அழைக்கப்படுகிறாள். பூக்களை சூடியதால், வண்டுகள் அம்பாளின் தலையில் மேய்கின்றன. அம்பாளின் கூந்தலே வாசம் உள்ளதால் அந்த கூந்தலை வண்டுகள், மலர் என்று நினைத்துக்கொள்கின்றன போலும்.

மட்டுவார்க்குழலி (சுகந்தி குந்தலாம்பாள்) என்று திருச்சிராப்பள்ளியில் அம்பாளுக்கு பெயர்.

திருப்பாம்புரம் என்ற ஸ்தலத்தில், அம்பாளுக்கு வண்டார்க்குழலி என்று பெயர்.

மா மலைகள், அலைக்கடல்கள், 14 உலகங்கள் போன்றவற்றை படைத்தவளும், வாசம் மிகு மலர்களை கூந்தலில் சூடியவளுமான அன்னையின் திருமேனியை நினைப்போர், அடையும் இடம், கற்பக வ்ருக்ஷத்தின் நிழல். அவர்கள் பூமியில் மீண்டும் பிறவா வரம் பெறுவார்.

*(தாயார் இன்றி மங்குவார், மண்ணில் வழுவாப் பிறவியை) தேக மாதா அவர்களுக்கு இனி கிடையாது, மீண்டும் தாயின் வயிற்றில் பிறக்க மாட்டார்.

பாடல் (ராகம் - பிலஹரி, தாளம் -ஆதி திஸ்ர நடை) கேட்க:

Check this out on Chirbit

Monday 12 October 2015

பாடல் - 74

பலன்: தொழிலில் மேன்மை அடைவோம்

நயனங்கள் மூன்றுடை நாதனும், வேதமும், நாரணனும்,
அயனும் பரவும் அபிராம வல்லி அடி இணையைப்
பயனென்று கொண்டவர், பாவையர் ஆடவும் பாடவும், பொன்
சயனம் பொருந்து தமனியக் காவினில் தங்குவாரே

பொருள்:

நயனங்கள் மூன்றுடை நாதன் - சிவன்
வேதம் - நான்கு வேதங்கள்
நாரணன் - நாராயணன், விஷ்ணு
அயன் - பிரம்மா

மும்மூர்த்திகளும், வேதங்களும் வணங்குவது அன்னை அபிராமயையே. அன்னையின் திருவடிகளை துணையாக கொண்ட அடியவர்கள், தேவ மகளீர் ஆடி, பாடி உல்லாசமாக களிக்கும் சுவர்க்க லோகம் கிடைத்தாலும், பொன் சிம்மாசனம் கிடைத்தாலும் அவற்றை விரும்ப மாட்டர்கள். அன்னையின் காலடியிலேயே தங்குவார்கள்.

அன்னையின் திருவடியை காட்டிலும் பெரியது ஒன்றும் இல்லை.

பாடல் (ராகம் - ஸ்ரீ ரஞ்சனி, தாளம் - ஆதி திஸ்ர நடை) கேட்க:

Check this out on Chirbit

Friday 9 October 2015

பாடல் - 73

பலன்: குழந்தைப் பேறு கிடைக்கும்

தாமம் கடம்பு, படை பஞ்ச பாணம், தனுக் கரும்பு
யாமம் வைரவர் ஏத்தும் பொழுது, எமக்கென்று வைத்த
சேமம் திருவடி, செங்கைகள் நான்கு, ஒளி செம்மை, அம்மை
நாமம் திரிபுரை, ஒன்றோடு இரண்டு நயனங்களே

பொருள்:
தாமம் - மாலை - கடம்ப மாலை. கடம்ப வனத்தில் சஞ்சரிப்பவள். அணியும் மாலை கடம்ப மாலை.
படை - ஆயுதங்கள் - 5 மலர்கள் - தாமரை, அசோக மலர், மாம் பூ, செண்பகம், நாக லிங்கம் மலர். - இவ்வைந்து மலர்களை அம்புகளாக அம்பாள் கையில் வைத்துள்ளாள்.
தனு - வில் - கரும்பு வில்
வைரவர் - பைரவர்கள் / வைராகி என்றும் கூறுவார்.

அம்பாள் அணியும் மாலை - கடம்ப மாலை
அம்பாள் வைத்துள்ள அம்புகள் - 5 மலர் அம்புகள்
அம்பாளின் வில் - கரும்பு வில்
வைரவர்கள் அம்பாளை தொழும் பொழுது - நள்ளிரவு - யாமம்
அம்பாள் எனக்கென்று (பட்டர், பக்தர்களுக்கு என்றும் கொள்ளலாம்) அளித்த செல்வம் (சேமம்) அம்பாளின் திருவடி.
அம்பாளுக்கு 4 கைகள். அவை சிவந்த கைகள். வரங்கள் பல கொடுப்பதால், சிவந்தனவோ என்னவோ!?
அம்பாளின் ஒளி/நிறம் - இளஞ்சிவப்பு
அம்பாளின் நாமம் - திரிபுரை
நயனங்கள் - நெற்றிக்கண் ஒன்றோடு, இன்னும் இரண்டு - ஆக மூன்று கண்கள்

பாடல் (ராகம் - ஹம்ஸத்வனி, தாளம் - ஆதி திஸ்ர நடை) கேட்க:

Check this out on Chirbit